Monday, April 19, 2010

அங்காடித் தெரு எனது பார்வையில்

வலி நிறைந்த அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் நிஜம் நன்கு உறைக்குமாறு உலகுக்கு உறைத்த வசந்தபாலனுக்கு நன்றி.

உழைப்பு சுரண்டல் உலகமயமாக்களுக்கு பிறகு மிகவும் அதிகமாகி உள்ளது. நான் ஆசிரியராக முதலில் பெற்ற சம்பளம் ரூ.900 மட்டுமே. அப்போது அரசு ஆசிரியர்களின் சம்பளம் ஏறத்தாழ ரூ.12000.அந்த சம்பளத்தையுமே பள்ளி தாளாளர் 25 நாட்கள் தாமதமாக தருவார்.

படத்தில் என்னை பாதித்த வசனம் கை கால்கள் கூட இல்லாமல் மனிதர்கள் உள்ளார்கள் ஆனால் அனைவருக்கும் வாயும் வயிறும் உள்ளது என்பது தான்.

சாப்பிட்டதை செரிக்க ஓடிக்கொண்டிருக்கும் மேல்வர்க்கத்தினர் இப்படத்தின் மூலம் செரிப்பதற்கு சாப்பாடு தேடி ஓடும் மக்களின் வலிகளை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

இப்படம் எனக்கு ஒரு வைரமுத்து கவிதையை நீண்ட நாட்களுக்கு பிறகு ஞாபகப்படுத்தி கண்களை குளமாக்கி விட்டது. அக்கவிதை ”ஏண்டியம்மா குத்த வெச்ச?” என்பதாகும்.

மொத்தத்தில் படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக அழவைக்கும் என்பதில் ஐயமில்லை.

பின்குறிப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் செய்து கொடுத்துள்ளன என்பதை அறியமுடியுமா?

No comments:

Post a Comment

சேப்பியன் சரித்திரம்

நூல்: சேப்பியன் சரித்திரம் - மனித பரிணாமமும் எஞ்சு நிலை உறுப்புகளும் நூலாசிரியர்: சிவக்குமார் சியாமளா ரவி பட்டினி கிடந்தா புற்றுநோய் செல்க...