Thursday, October 3, 2024

CECRI - CENTElRAL ELECTRO CHEMICAL RESEARCH INSTITUTE

CECRI - CENTElRAL ELECTRO CHEMICAL RESEARCH INSTITUTE
நம்ம பாஜக குரூப் நேரு இந்தியாவ சர்வநாசம் ஆக்கிட்டார் என்று சதா சர்வ காலமும் குற்றம் சாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தொழில் துறை விவசாயம் அறிவியல் என்று அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அவர்தான் போட்டு வைத்து சென்றுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் ( CECRI )1953ல் நேரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமானால் தொழில் துறைக்கு தேவையான உபகரணங்கள் சார்ந்து தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு கொண்டே வர வேண்டும். அந்த அடிப்படையில் தான் CSIR - (அறிவியல் மற்றும் தொழில் துறைக்கான ஆராய்ச்சி) தொடங்கப்பட்டது. அந்த CSIR ன் கீழே வரும் ஒரு ஆய்வு மையம் தான் CECRI - KARAIKUDI. சிக்கிரியைப் பொறுத்தவரையில் மின்துறை சார்ந்த வேதிப் பொருட்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இங்கே ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்ட பல விஷயங்கள் தொழில் துறையில் அறிவியல் துறையிலும் பாதுகாப்பு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு கொண்டு உள்ளது என்பதை இன்று நேரில் பார்த்தபோது கண்கூடாக உணர முடிந்தது . ஆமாம் இன்றைக்கு CECRI ஆய்வுக்கூடத்தை பொதுமக்கள் & மாணவர்கள் நேரில் கண்டு பயன்பெறும் வகையில் ஓபன் டே வைத்திருந்தார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்தபோது இந்த நிறுவனம் குறித்து எனது சக நண்பர்கள் குறிப்பிட்டு பேசியிருந்தனர். அப்பொழுது இருந்தே ஒரு முறை இங்கே சென்று வர வேண்டும் என்று ஒரு ஆவல் இருந்து கொண்டே இருந்தது. ஓபன் டே குறித்த சர்குலர் பள்ளிக்கு வந்திருந்தது . அன்றே நிச்சயமாக இந்த ஆண்டு தவறாமல் சென்று வர வேண்டும் என திட்டமிட்டேன். CECRI யில் B.Tech in Chemical and Electrochemical Engineering நடைபெற்று வருகிறது. இந்த படிப்பு அண்ணா யுனிவர்சிட்டி யின் கீழ் வருகிறது . ஆகவே மாணவர்களின் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கட் ஆஃப் அடிப்படையில் சேர்க்கைக்கு பெறலாம். பல்வேறு ஆராய்ச்சி வல்லுநர்களின் நிறைய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆய்வு மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக இங்கே படித்து வருகிறார்கள். அவர்கள்தான் மக்களுக்கு சற்று சலிப்பில்லாமல் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். காரைக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக்,கலை அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பொறுமையாக பார்த்துச் சென்றார்கள். முக்கியமாக பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் சென்று அங்கே இருந்த ஆய்வு மாணவர்களிடம் தெளிவாக விளங்கிக் கொள்ள பல கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர். சூப்பர் கெபாசிட்டர் என்று புதியதொரு கெபாசிட்டரை கண்டறிந்து டெமோ காண்பித்தனர். அதுபோல துருப்பிடித்தலை தவிர்ப்பதற்கு பூசப்படும் வேதிப்பொருள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் பற்றியும் அவை மிகப்பெரிய கட்டமைப்புகள் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இவர்களது தொழில் நுட்ப ஆலோசனை வழங்கப்படுவது பற்றியும் வைத்திருந்த காட்சி பொருள்கள் சுவாரசியத்தை தந்தன. முக்கியமாக ஒரு விளையாட்டு மைதானம் அளவுக்கு பெரிய இரும்பு நீர் தேக்க தொட்டி தேக்கு மரத் தூண்களின் மேல் வைக்கப்பட்டிருக்கிறதாம் அது 150 ஆண்டுகள் கடந்து இன்றளவுக்கும் பயன்பாட்டில் இருக்கிறது என்கிற தகவல் கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆமாம் கொல்கத்தாவில் அந்த நீர்த்தக்க தொட்டி உள்ளதாம். 3D printer குறித்த ஏராளமான சுவாரசியமான தகவல்கள் ஆச்சரியத்தை கொடுத்தன. முக்கியமாக மருத்துவத்துறையில் 3டி பிரிண்டர்களின் பங்கு எவ்வளவு அவசியமானது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஹைட்ரஜன் எரிபொருளை பிரிப்பது குறித்த ஆய்வுகளும் எதிர்காலத்தில் இன்னும் எவ்வளவு நவீனமயமான இலகுவான பேட்டரிகள் வரப்போகின்றன என்பது குறித்த ஆய்வுகளும் சிறப்பான முறையில் அங்கே நடைபெற்றுக் கொண்டு உள்ளன. அடுத்த ஆண்டு ஓபன் டேவை மையப்படுத்தி எங்கள் பள்ளி மாணவர்கள் பார்த்து வரும் படி ஒரு கல்வி சுற்றுலாவை ஏற்பாடு செய்யலாம் என்கிற எண்ணம் உள்ளது ஏனெனில் இது போன்ற மையங்களுக்கு செல்லும்போது மாணவர்கள் கல்வி குறித்த இன்னும் ஆழமான விசாலமான பார்வையை பெற முடியும்.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...