இன்று எங்கள் பள்ளியில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வழக்கமாக விழா கொண்டாடப்படும் மைதானம் மழையால் சேதமடைந்ததால் விழாவானது ஓட்டுக் கட்டிட முற்றத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கங்கைகொண்டசோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை வங்கி மேலாளர் அவர்கள் வழங்கினார். மாணவர்களின் வழக்கமான எதிர்பார்ப்பிற்கிணங்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவ மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்று விழாவிற்கு அணி சேர்க்கும் வண்ணம் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சண்முகம் அவர்கள் சென்ற ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியர்கள் இ.சிலம்பரசி (ஓ 475ஃ500) மற்றும் ப.அகிலா (ஓஐஐ 1034ஃ1200) வுக்கு பரிசு வழங்கினார். விழாவின் இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
தாய் கிழவி
தாய்க் கிழவி ஊரே இவ எப்படா ஒழிந்து போவா என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ரவுடி பேபி கிழவி ராதிகா. சொந்த மகன்களும் கிழவி எப்ப ஒழிவா சொத...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா…. ”ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலி சல சல சல வென சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே ...

No comments:
Post a Comment