Thursday, April 28, 2016

"என் கண்மணி என் காதலி இளமாங்கனி
உனை பார்த்ததும் சிரிக்கின்றதோ சிரிக்கின்றதோ..."
...
...
"தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு "
"வாரணாசி வந்தாச்சி எறங்கு"
'யார்ரா அது'
அட கண்டக்டர்!
பாடல் மீண்டும் ஒளிக்கத் தொடங்கியது
பஸ் மெல்ல வேகமெடுத்தது.
"யாருய்யா அது ஒரு டிக்கெட் கொறயுது?!"
என்றார் கண்டக்டர். இதற்கு முன்பாக ஒரு நான்கு முறை தலையை எண்ணியபடி சென்றார்.
நான் எனது டிக்கெட்டை தொட்டுப்பார்த்துக் கொண்டேன். எனது இடத்தை நெருங்கிய கச்டக்டர் முன் இருக்கை பெரியவரை துயிலெழுப்பினார்
"யோவ் ஏன்யா உயிர வாங்குறீங்க எங்கய்யா எறங்கனும்?'
அலட்சியமாக அரைக்கண்ணை திறந்தவாறு " ம்ம் ...கீழப்பழுவூர் " என்றார்
"யோவ் அதுக்கப்புறம் மூணு ஸ்டாப் தாண்டி இப்போ தவுத்தாகுளமே வரப்போவுதுய்யா"
அதற்காக சற்றும் மனம் தளறாத 'விக்கிரமாதித்தன்' "இங்க நெறய பஸ் நிக்காது நீ அரியலூர் கொடு" என்று ஏழு ரூபாய்க்கு கொத்தாக பணத்தை அள்ளி கொடுத்தார். தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தையும் டிக்கெட்டையும் வழங்கினார்.
"நைட் ட்ரிப்ல இதே தொல்லையா போச்சு. தண்ணிய போட்டுட்டு வந்து ஏறிகிறானுவோ எழுப்பி எழுப்பி எறக்கி விட வேண்டியிருக்கு!"
"ரிட்டன் வரும்போது 'வாரணாசி' எடுங்க அப்போது தான் கீழப்பழுவூர் ல எறக்கி விடுவாங்க" என்றார் ஒரு குறும்புக்கார சக பயணி.
# நைட் ட்ரிப் பஸ் ஏறும் போது ஒரு 'கால்' எறக்கிட்டு ஏறுனா சும்மா ஜில்லுன்னு தூங்கிய படி வரலாம்னு நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். மனிதர் நான்கு கால்களை எறக்கியிருப்பார் போல!!

No comments:

Post a Comment

மலையாளக் கரையோரம் -3

மலையாளக் கரையோரம் - 3 (ஏனைய இரண்டு பாகங்களை ஜனவரி மாதமே சுடச்சுட எழுதிவிட்டேன். இது சற்று தாமதமாகிவிட்டது) பள்ளிக் கல்வியில் கோலேச்சுகிற...