Sunday, May 8, 2016

நான் என்ன சொல்றேன்னா....

நான் என்ன சொல்றேன்னா....
ஈஷா குப்தா என்ற பெண் இந்தியாவை தனது பைக்கில் சுற்றி வரும் சாதனைப் பயணம் மேற்கொண்டவர். தனது அனுபவங்களை 'தி இந்து' வில் எழுதி வருகிறார். நேற்றைய பகுதியில் ஜார்கண்ட் மாநில பயண அனுபவங்களை கூறியிருந்தார். அது காடுகள் நிறைந்த தேசம். இன்று வரை அனைத்து ஊர்களுக்கும் மின்வசதி என்ற நிலை ஏற்படவே இல்லை. தொடக்கப்பள்ளிகள் எல்லா கிராமங்களிலும் இல்லை என்கிறார்.
தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆண்டு நாட்டையே குட்டிச்சவராக்கி விட்டதாக நாம் அங்கலாய்க்கும் திராவிட கட்சிகள் 90 களிலேயே எல்லா குக்கிராமங்களுக்கும் (மலைகிராமங்கள் உட்பட) மின்வசதி வழங்கி விட்டன. தொடக்கப் பள்ளி இல்லாத ஊர்கள் உண்டா?!
CCRT பயிற்சிக்கு சென்ற போது ஜார்கண்ட் மாநில ஆசிரியர்கள் 3 பேரை சந்தித்தேன். அவரது சம்பளத்தைவிட நம் மாநிலத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளரின் சம்பளம் அதிகம். இந்தி மொழியில் சரளமாகப் பேசும் அவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியவில்லை அவர்களிடம் பேசமுயன்று கொஞ்சம் இந்தி கொஞ்சம் பரதநாட்டியம் (கை கால் கண் இவற்றால் பேசவேண்டும் அல்லவா) கற்றுக் கொண்டது தான் மிச்சம்.
இந்தி எதிர்ப்பு மட்டும் நடத்தாமல் போயிருந்தால் நமது ஆங்கில அறிவும் அவர்கள் போலத்தான் இருந்திருக்கும். வெளிநாட்டுக்காரன் இண்டர்வியூவில் நம்மிடம் பரத நாட்டியம் ஆடியே நாக்கு தள்ளி ஆணியே புடுங்க வேண்டாம்னு ஓடியிருப்பான். வெளிநாட்டு வேலை கணினி தொடர்பான வேளைகளில் ஆதிக்கம் என தமிழ்நாட்டவர் உலக அரங்கில் கம்பீரமாக வலம் வர காரணம் இந்தியை 'தம்பி நீ கொஞ்சம் ஒதுங்கு' என்றதுதான்.
ஐய்யயோ இந்தி படிக்காமல் என் வாழ்க்கையே வீணாப் போயிடுச்சே இந்த கலைஞர் மட்டும் இல்லைன்னா நானும் இந்தி நல்லா படிச்சு ராஜஸ்தானுக்கு 'டைல்ஸ்' ஒட்டவோ அல்லது பீகாரில் கட்டிட வேலைக்கோ போயிருப்பேன் என்று புலம்புவோர் தனியே சொந்த முயற்சியில் 'இந்தி பிரச்சார சபா' மூலமாக கிட்டத்தட்ட இலவசமாக இந்தி பயிலலாம்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நிலை வந்ததால் தானே நமக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் வந்து சேர்ந்தது. தேசிய கட்சிகள் என்ன கரணம் போட்டாலும் இங்கே காலூன்ற முடியாததற்கு என்ன காரணம்? மாநில கட்சிகள் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லாதது தானே!  மத்தியில் ஆளும் பாஜகவையே அனாதையாக அலைய விட்டிருக்கிறோம். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடெங்கும் மோடி என்ற ஊடகங்களால் உருவாக்கப்பட்ட அலை அடித்த போதும் இங்கு ஒரு சலசலப்பும் இல்லையே!
2G ஊழல் செய்தது திமுக தானே என்று சொல்வோரே சற்று கேளுங்கள். திமுக ஊழலற்ற பரிசுத்தமான கட்சி என்று சொல்வது எனது நோக்கமல்ல. அனைத்து கட்சியிலும் ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்வது இங்கே வாடிக்கை தான். 'அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டும் கார்பரேட் கம்பெனிகள் அதில் ஒரு பகுதியை துறை சார்ந்த அமைச்சருக்கு லஞ்சமாக வழங்கும் ' என்பதுதான் கட்சி பாகுபாடு இன்றி அனைவருக்குமான லஞ்ச சூத்திரம். அதற்கு திமுகவும் விதிவிலக்கல்ல.
அப்போது அந்த 'ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி'?!!
பகிரங்க ஏலம் மூலமாக 2G அலைக்கற்றையை எடுத்து ஏகபோக லாபம் ஈட்ட நினைத்த முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் செய்த கைங்கர்யம் தான். ₹176000.... க்கு ஏலம் எடுத்தவன் அந்த பணத்தை எங்கிருந்து லாபத்தோடு எடுப்பான்?! நம்ம பாக்கெட்டிலிருந்து தானே?!! அந்த ஏலத்தொகை கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றே. 3G அலைக்கற்றையே 36000 கோடிக்குத்தான் ஏலம் போயிருக்கிறது என்பதை அறிக. நேற்று நான் போட்ட டேட்டா 1.5GB@₹264 போன மாதம் அதே விலை ஆனால்2GB ! டேட்டா பயன்படுத்தும் நண்பர்களே 3 மாதங்கள் தொடர்ந்து டேட்டா சேவை ஒரே விலையில் இருந்தது உண்டா?! பகிரங்க ஏலம் மூலமாக இப்போது மொத்தமும் அவர்கள் கையில். பொன்முட்டை இடும் வாத்தை அறுத்து பார்த்த கதைதான்.

No comments:

Post a Comment

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...