Wednesday, August 22, 2018

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்….


   

யுவன் சங்கர் ராஜாவும் நா.முத்துக்குமாரும் சேர்ந்தாலே பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் தான்.
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை என்ற அங்கலாய்த்துக் கொண்ட நா.முத்துக்குமார் தான் இதயம் பேசும் நம்பிக்கை வார்த்தைகளை புரிந்துகொண்டு கவிதையாய் இந்தப் பாடலில் வடித்திருக்கிறார்.
நேஹா பேசின் என்பவர் பாடியது. அருமையான குரல். குரலில் தேன் குழைத்து என்பதை கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அனுபவரீதியாக உணர்வது இந்தப் பாடலில் தான். உள்ளபடியே இவரின் குரல் “செந்தேன் குழல்“ தான்.
பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
மோசமான சூழல்களால் மனது கலங்கி நிற்கும் போது இதமாக பேசும் இதயத்தின் வார்த்தைகள் எவ்வளவு அருமையாக உள்ளது. “புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்” அருமையான வரிகள்.
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
பாடலின் சரணங்கள் இரண்டுமே தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளால் நெய்யப் பட்டவை.
கடல் தாண்டும் பறவைகள் எவ்வாறு இளைப்பாரும் என்று எனக்கு தோன்றியதே இல்லை இந்தப் பாடலைக் கேட்கும் வரை.
அடுத்ததாக ஒரு பாஸ் கொடுத்து “அடங்காமலே“ என்று ஆரம்பிக்கும் இடம்…
சொல்பேச்சு கேளாமல் குறும்பு செய்யும் குழந்தைகள் பால் அன்னையர் காட்டும் செல்லக் கோபம் போல அந்த வரி வெளிப்படுகிறது. எவ்வளவு சொல்லியும் இந்த மனம் அடங்க மாட்டேன் என்கிறதே!!
“அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா?!!”

“கங்கை நதிக்கு மண்ணில் அணையா” என்பது போன்றது தான் நாம் மனதுக்கு போட நினைக்கும் வேலி.
இந்த சூழலை அழகாய் விளக்கும் இன்னுமொரு கவிதை பாருங்கள்.

வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?
-      கவிக்கோ அப்துல் ரகுமான்
நமது உள்ளத்தின் உள்ளே இரண்டு பேர் இருந்துகொண்டு மௌன மொழி கொண்டு தர்க்கம் புரிகிறார்கள்.  மௌனத்தின் பேரிரைச்சல் நமக்கு தாங்க இயலாததாக உள்ளது. நமது அமைதி கெடுகிறது.
உள்ளத்தின் உள்ளே உள்ள இருவரில் ஒருவன் மனம் போன போக்கில் நினைத்ததை அடைய எண்ணுகிறான். ”ஆதி யோகி” புகழ் ஜக்கியின் சொல் கேட்டு “அத்தனைக்கும் ஆசைப் படுகிறான்”
இரண்டாமவனோ சமூக ஒழுங்குக்கு கட்டுப் பட்டு நடக்கும் படி இடையறாது அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறான். வேலிக்கு வெளியே தலையை நீட்டிய கிளைகளை வெட்டிய தோட்டக்காரன் அவன்தான். இருந்தாலும் கூட வேலிக்கு அடியில் வேர்களை நழுவ விடுகிறான் குறும்புக்கார முதலாமவன்.
முதலாமவனை கொன்று ஒழித்துவிட வேண்டும் என்று “ஆசை“ப் படுவது தான் புத்தரின் ஞானம்.

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...