Thursday, November 30, 2017

நானே நானோ-1

நானே ”நானோ”!!

என்ன ரொம்ப ஃபிலாசபிக்கலான தலைப்பா இருக்கேன்னு பாக்குறீங்களா?
இது அந்த நானோ அல்ல அறிவியல் தொடர்பான NANO.
அய்யய்யோ எங்க தலை தெறிக்க ஓடுறீங்க? நீங்க நினைக்கிறமாதிரி இது டூமச்சான அறிவியல் தொடர்பானது இல்லைங்க. நானோ டெக்னாலஜி வேகமாக வளர்ந்துவரும் இயற்பியல் புலம். அது சார்ந்த சுஜாதா புத்தகம் மற்றும் இணையத்தில் மேய்ந்த நுனிப் புற்களை சற்று சுவாரசியமாக பகிரலாம் என்று எண்ணுகிறேன்.
நானோ என்பது எந்த ஒரு அறிவியலுக்கும் சொந்தமான ஒரு பிரிவு இல்லைங்க. மீட்டர் சென்டி மீட்டர் மாதிரி அதுவும் ஒரு சைஸ் அவ்வளவுதான். எவ்வளவு பெரிய அல்லது சிறிய சைஸ்?
வாங்க, அது தான் மேட்டரே!
ஒரு மீட்டரை நூறு கோடியா பிரிச்சி அதுல ஒரு பகுதிய எடுத்தா அது தாங்க நானோ மீட்டர்.
யப்பா ஒண்ணும் விளங்கலையேப்பா!
குண்டூசி முனையில் 10லட்சத்தில் ஒரு பங்கு.
நீங்க படிக்கிற நியூஸ் பேப்பரோட திக்னஸ் ஒரு இலட்சம் நானோ மீட்டர் தெரியுமா?
நானோ மீட்டர் ஒரு சிறு கூழாங்கள் என்றால் மீட்டர் என்பது இந்த பூமி.
அறிவியல் பாடத்தில் அணுக்கள் பற்றி படிச்சிருப்பீங்க இல்லையா?
அணு மிகவும் நுண்ணியது என்று சொல்லியிருப்பாங்க இல்லையா?
நானோ என்பது பத்து ஹைட்ரஜன் அணுக்களை வரிசையாக நிற்க வைத்தால் எவ்வளவு நீளம் இருக்குமோ அவ்வளவு நீளம் இருக்கும்.
“ஜீ பூம்பா” போட்டு உங்கள நானோ மீட்டர் சைசுக்க சுருக்கி விடுவதாக வைத்துக் கொள்வோம்.
நீங்க அணுக்களை உதைத்து ஃபுட்பால் விளையாடலாம்.
தலைமயிரின் உள்ளே பங்களா கட்டி குடியேறலாம்.
கண்ணுக்கு புலப்படாத நுண் கிருமிகள் எல்லாம் கூட உங்களுக்கு டைனோசராகத் தெரியும்.
எங்கள் கண்ணுக்கு புலப்படாத கரியமில வாயுவும் பிராண வாயுவும் உங்க கண்ணுக்கு அணுக் கூட்டங்களாகவே தெரியும்.
டி.என்.ஏ புரத இரட்டைச் சுழல் சங்கிலியில் தொங்கிக் கொண்டு சர்க்கஸ் ஆடலாம்.
சோ நானோ என்றால் உங்களுக்கான சட்டைத் துணியை சமமாக பிரித்து இந்தியாவில் உள்ள அனைத்துப் பேருக்கும் வெட்டிக் கொடுத்தால்  என்ன சைஸ் கிடைக்குமோ அந்த சைஸ் தான்.
சரி சரி ரொம்ப ஓவரா மொக்க போடல, அடுத்த விஷயத்துக்கு வரேன்.
’ரொம்ப ரொம்ப நுண்ண்ண்ணிய அளவு. அவ்வளவு தானே? அதுக்கு என்ன இப்போ?’ என்று நீங்க நினைப்பது புரிகிறது.
கணினியில் பயன் படுத்தப் படும் சில்லுகள் எல்லாம் ”மூர்” என்பார் கூறிய கூற்றின் படி அளவில் சிறியதாக சுருங்கிய வண்ணமும் செயல் பாட்டுத் திறன் அதிகரித்த வண்ணமும் ஆண்டு தோறும் செல்கின்றன.
இப்போது தயாரிக்கப் படும் சில்லுகள் எல்லாம் கிட்டத் தட்ட 100 நானோ அளவுக்கு சிறியதாக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
நானோ டெக்னாலஜி அறிவியலாளர்களின் அல்டிமேட் நோக்கம் ”அணு அளவில் சென்று பொருட்களை இஷ்டப் படி மாற்றுவது” என்பதாக உள்ளது.
அதனால் என்ன பயன் கிட்டப் போகிறது?!
இப்போது நடைமுறையில் உள்ள “சோலார் பேனல்கள்“ அதன் மீது விழும் சூரிய ஒளியில் சிறிதளவை மட்டுமே மின்சாரமாக மாற்றுகிறதாம். நானோ டெக்னாலஜி ஆராய்ச்சி மூலமாக அதன் திறனை பல மடங்கு அதிகரிக்க இயலுமாம்.
கடல் நீரில் இருந்து ”ஹச் டூ ஓ” (நீர் மூலக்கூறு) ஐ மட்டும் அழகாக வடிக்கட்டி மினரல்ஸ் சேர்த்து குடிக்க குளிக்க பயன்படுத்தலாம். வீராணத்தில் இருந்து சென்னைக்கு நீர் போவது மாறி சென்னையில் இருந்து நீர் கொண்டு வந்து வீராணம் ஏரியை நிரப்பும் நாள் கூட வரக்கூடும்.
டி.என்.ஏ சங்கிலியில் ஒளிந்து இருக்கும் மரபு வழி குறை பாட்டை உதைத்து வெளியேற்றி நமது சந்ததிக்கே அந்த மரபு நோய் இல்லா நிலையை உண்டு பண்ணலாம்.
உடலுக்குள் படையெடுத்து நுழைந்து அழிச்சாட்டியம் செய்யும் நோய்க் கிருமிகளை உதைத்து வெளியேற்ற நானோபாட்(NANO ROBOT) படையை அனுப்பலாம். அல்லது சாத்வீகமாக அந்த கிருமிகளில் உள்ள ”ரெட் சிப்(எந்திரன் புகழ்)” ஐ கழட்டி நண்பனாக்கிக் கொள்ளலாம்.
நானோ பாட் படையை ரத்த நாளங்களுக்குள் மாதம் ஒரு முறை அனுப்பி ஒட்டடை அடித்து சுத்தம் செய்யச் சொல்லலாம். அப்புறம் என்ன டெய்லி மூணு வேளையும் பூரியும் பஜ்ஜியும் எண்ணை சொட்டச் சொட்ட சாப்பிட வேண்டியது தான்.
“எவ்வளவோ பண்றோம் இதப் பண்ண மாட்டோமா?” என்று இதையெல்லாம் உடனே செய்யலாம்தான். ஆனால் இந்த இயற்பியலில் சாதாரண நிலையில் உள்ள சட்ட திட்டங்களை குவாண்டம் அளவிலான துகல்கள் மதிப்பது இல்லை. அது அது இஷ்டத்துக்கு நடந்துக்குது. அந்த நிலையற்ற தன்மை சற்று அச்சுறுத்தலாக உள்ளதாக அறிவிலாளர்கள் கூறுகிறார்கள்.
நானோ டெக்னாலஜி பற்றி நான் ஒன்றும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை இது வெறும் ட்ரெய்லர் தான். அடுத்த பாகத்தில் மெயின் பிச்சரை ஸ்டார்ட் பண்றேன்.
(எனது நட்பு வட்டத்தில் உள்ள இயற்பியல் முனைவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் என்மேல் கொலைவெறி கொள்ளாதீர்கள். இது டெக்னிக்கலான பதிவு அல்ல. ஒரு மேம்போக்கான பகிர்வு மட்டுமே. எனவே சித்தாந்த ரீதியிலான தவறுகள் இருந்தால் கண்டிப்பாக கமெண்ட் பண்ணுங்க எல்லோருக்கும் விளங்கும்)



Sunday, November 26, 2017

லால்குடி டேஸ்-17 அறிவு இருக்கு ஆனா பகுத்தறிவு? பாகம்-1

லால்குடி டேஸ்-17 அறிவு இருக்கு ஆனா பகுத்தறிவு? பாகம்-1

பனிக்காலம் போய் மெல்ல வெயில் காலம் தலைகாட்ட ஆரம்பிக்கும் பிப்ரவரி இறுதியில் இருந்தே இரவு நேரங்களில் விடுதியில் எல்லோரும் மொட்டை மாடியில் துண்டு போட்டு இடம் பிடிக்க ஆரம்பித்து விடுவோம்.
சிறுவர்கள் கூட்டம் அதிகமாக இருந்து ரொம்பவும் தொந்தரவாக இருக்கிறது என்றால் யாரேனும், “டேய் அன்னைக்கு ஒரு நாள் இராத்திரி பன்னெண்டு மணி இருக்கும், அதோ அந்த கட்டை சுவற்றில் வெள்ள டிரெஸ் கொலுசு எல்லாம் போட்டுக்கிட்டு சும்மாஜலக் ஜலக்“ ….” என்று ஆரம்பித்த உடனேயே மெல்ல மெல்ல சிறார் கூட்டம், “அண்ணே என்னண்ணே பேய்க்கத சொல்றீங்க?” என்று புலம்பிக் கொண்டே கீழே போய்விடுவார்கள்.
அப்புறம் ஆரம்பித்தக் கதையின் விட்டக் குறை தொட்டக் குறை எல்லாம் தொடர ஆரம்பிக்கும்.
அருள் அன்றைக்கு ஒரு கதை ஆரம்பித்தான்.
எங்க ஊர்ல கந்தசாமின்னு ஒரு ஆளு இருந்தார். அன்னைக்கு வீட்ல யாரும் இல்ல அந்த ஆளு தனியாதான் படுத்து இருந்தார்
ம் சொல்லு
நைட் மணி ரெண்டு இருக்கும், அவங்க அப்பா வந்து அவர எழுப்பி இருக்கார்
அவர் எங்கேருந்து வந்தார்?”
அவர் செத்து பத்து வருஷம் ஆச்சு
திகில் எல்லோரையும் லேசாக கவ்வ ஆரம்பிக்கவே படுக்கையில் இடைவெளி குறைந்தது.
அப்போ பேயா?” என்ற இராஜவேலுவின் குரலில் அந்தயாபிசிரடித்தது.
ஆமா, அவர எழுப்பிடேய் மோட்டார போட்டுட்டு வந்து இப்படி தூங்குறியே அங்கே வாய்க்கால் ஒடச்சிக் கிட்டு தண்ணி வீணா போகுதுன்னு சொல்லி இருக்கார்
அந்தாளு பயப்படலையா?”
தூக்க கலக்கத்தில என்ன நெனச்சானோ தெரியல அவம் பாட்டுக்கு மம்பட்டிய எடுத்துக் கிட்டு டார்ச் லைட்டையும் எடுத்துக் கிட்டு பின்னாடியே போனான்
அங்க வயல்ல தண்ணிய அடைச்சானா?”
அவன்தான் வயலுக்கு போகலையே, அவங்க அப்பா போன பாதையிலேயே மந்திரிச்சி உட்டவன் மாதிரி நடந்து போனான்
எங்க?”
சுடுகாட்டுக்கு!”
என்னது சுடுகாட்டுக்கா?” அத்தனை பேரும்வீல்என்று அலறினர்.
சுடுகாட்டுக்கு அழைச்சிக் கிட்டு போய் அங்கேருந்து அவனோட செத்துப் போன தாத்தா பாட்டி அவனோட அண்ணன்அவனோட அண்ணன் பிறந்த மூன்று மாதத்தில் இறந்து போனவன்- எல்லோரும் இவன கையை பிடிச்சிக்கிட்டு திரும்பவும் வயக்காட்டுக்கு போனாங்க
ஏண்டா எனக்கு பொங்கலுக்கு டிரெஸ் எடுத்து படைக்கலன்னு முதல்ல அப்பன் காரன் மம்பட்டியால அடிச்சான்
ஐயோ” ’கத ரொம்ப டெர்ரரா போகும் போல இருக்கே?’ என்று இரண்டு பேர் மெல்ல நழுவினர்  
ஏண்டா எனக்கு தீவாளிக்கு சாராயம் வச்சி படைக்கல? ன்னு தாத்தா அதே மம்பட்டிய வாங்கி மண்டையில ஒரே போடு போட்டான்
எனக்கு ஏண்டா பாலு வச்சி படைக்கலன்னுபொறந்து மூணு மாசத்துல செத்து போனவனும் அவன் பங்குக்கு கொரவலைய கடிச்சி துப்பிட்டான்.
காலையில பாத்தா அவங்க வீட்டு வயல் வரப்புல செத்து கிடக்கான்என்று அந்த டெர்ரர் ஸ்டோரிய முடிச்சான் அருள்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்!” என்று மெல்ல நான் எழுந்தேன்மே கம் இன்
என்னடா சந்தேகம்?”
அந்த ஆளு வீட்டுல தனியா இருந்துருக்கான். வயலுக்கு போய் தனியா செத்துக் கிடந்துருக்கான். இடையில நீ சொன்ன விஷயத்த எல்லாம் யாருப்பா பக்கத்தில் இருந்து பார்த்தது?”
ம்ம்..அது வந்து.. எங்க அப்பாதான் சொன்னாரு
யாரு வேண்ணா சொல்லி இருக்கட்டும். அந்த ஆள சுடுகாட்டுக்கும் பின்பு வயக்காட்டுக்கும் அழைச்சிக் கிட்டு போய் பேய் அடிச்சி கொன்னத பாத்தது யாரு?”
அது வந்து
ஏண்டா கதை சொல்றதுலயும் ஒரு லாஜிக் வேண்டாமாடா? ஒரு சினிமா படம் மாதிரி இவ்வளவு நேரம் ஓட்டுனியே ஒரு ரீலு அதுக்கு சாட்சி யாரு? ஆக ஒருத்தன் செத்தத வச்சி சும்மா சிலந்தி வலை மாதிரி இம்மாம் பெரிய கதை பின்னிட்டீங்களேடா
நீ நம்புனா நம்பு நம்பாட்டி போடா?”
டேய் நான் என்னடா கேட்டன் இப்படி கோவிச்சிக்கிற? தனியா இருந்தவன் தனியா போனான், தனியா செத்துக் கிடக்கான். இதுக்கு இடையில அவன அவன் அப்பா கூப்பிட்டது, தாத்தா, பிஞ்சுல செத்த குழந்தை எல்லாரும் அவன அடிச்சு கொன்னத பாத்து யாரு ஊரார் கிட்டயோ இல்ல உங்க அப்பா கிட்டயோ சொன்னது யாரு? அத சொல்லு நான் நம்புறேன்
நீ போடா நான் தூங்குறேன் என்று போர்வையை தலைவரை இழுத்து விட்டுக் கொண்டான்
பேய்க் கதைகள் யாவும் இந்த மாதிரி இட்டு நிரப்ப படாத லாஜிக் ஓட்டைகளுடனேயே உலா வரும்.
நாம கேள்வி கேட்காமல் சரி போவட்டும் விடு என்று விடும் போது அதுக்கு கண் காது மூக்கு எல்லாம் முளைத்து நடமாடும்.
விடுதிகளில் பேய்க் கதை சொல்வதற்கென்றே பிரத்தியேகமாக கதை தயார் செய்கிறவர்களும் உண்டு. மேற்படி கதை கூட அருளுடைய சொந்த சரக்காக இருக்கக் கூடும்.

-தொடரும்.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...