Wednesday, December 14, 2011

பதவி உயர்வில் சென்றபின் கொஞ்சம் பிஸி

நீண்ட நாட்களாக ஒன்றும் போஸ்ட் செய்யவில்லை. எனக்கு பதவி உயர்வு கிடைத்தபின் நேரம் இல்லை. விரைவில் நிறைய செய்திகளுடன் புதுப்பொலிவுடன் வரவிருக்கிறேன். Wait and See Jayarajsir is going to Rockkk!!!

Tuesday, November 1, 2011

"Reservation" to be or not to be an Open Debate

Our Social structure is cunningly set up in such a way that a small group of people is able to exploit the resource of a large mass of population.
Unfortunately the victims were taught to obey happily.
 But now they refuse to be so.
 They want to have their reasonable share.
They are asking for opportunity.
But the people are ready to offer fish but not ready to teach fishing.
So Let the under privileged get their due share of opportunity.

Monday, September 5, 2011

Happy Teachers Day 2011

"Teaching is not a lost art, but the regard for it is a lost tradition." - Jacques Barzun

    "Good teachers are costly, but bad teachers cost more." - Bob Talbert

    "The true teacher defends his pupils against his own personal influence. He inspires self-distrust. He guides their eyes from himself to the spirit that quickens him. He will have no disciple." - Amos Bronson Alcott

    "A good teacher is like a candle - it consumes itself to light the way for others." -Anonymous

    "Teaching is leaving a vestige of one self in the development of another. And surely the student is a bank where you can deposit your most precious treasures." - Eugene P. Bertin

    "The mediocre teacher tells. The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires." - William Arthur Ward

    "A teacher's purpose is not to create students in his own image, but to develop students who can create their own image." - Anonymous

    "What the teacher is, is more important than what he teaches." - Karl Menninger

    "The dream begins with a teacher who believes in you, who tugs and pushes and leads you to the next plateau, sometimes poking you with a sharp stick called truth." - Dan Rather

    "In teaching you cannot see the fruit of a day's work. It is invisible and remains so, maybe for twenty years." - Jacques Barzun

    "Teaching is the profession that teaches all the other professions." - Anonymous

    "The best teachers teach from the heart, not from the book." - Anonymous

    "A teacher affects eternity; he can never tell where his influence stops." - Henry Brooks Adams

    "Teachers, I believe, are the most responsible and important members of society because their professional efforts affect the fate of the earth." - Helen Caldicott
    "Better than a thousand days of diligent study is one day with a great teacher." -Japanese proverb

    "The whole art of teaching is only the art of awakening the natural curiosity of young minds for the purpose of satisfying it afterwards." -Anatole France

    "Those who educate children well are more to be honored than parents, for these only gave life, those the art of living well." - Aristotle
  • Dan Rather
    The dream begins with a teacher who believes in you, who tugs and pushes and leads you to the next plateau, sometimes poking you with a sharp stick called truth.
  • Henry Brooks Adams
    A teacher affects eternity; he can never tell where his influence stops.
  • Robert Brault
    The average teacher explains complexity; the gifted teacher reveals simplicity.
  • Cicero
    The authority of those who teach is often an obstacle to those who want to learn.
  • Jacques Barzun
    In teaching, you cannot see the fruit of a day's work. It is invisible and remains so, maybe for twenty years.
  • Helen Caldicott
    Teachers, I believe, are the most responsible and important members of society because their professional efforts affect the fate of the earth.
  • Albert Einstein
    It is the supreme art of the teacher to awaken joy in creative expression and knowledge.
  • Nikos Kazantzakis
    Ideal teachers are those who use themselves as bridges over which they invite their students to cross, then having facilitated their crossing, joyfully collapse, encouraging them to create bridges of their own.
  • Johann Wolfgang von Goethe
    A teacher who can arouse a feeling for one single good action, for one single good poem, accomplishes more than he who fills our memory with rows and rows of natural objects, classified with name and form.
  • Ken Blanchard
    Your role as a leader is even more important than you might imagine. You have the power to help people become winners.
  • William Butler Yeats
    Education is not the filling of a pail but the lighting of a fire.
  • Forest Witchcraft
    A hundred years from now, it will not matter what kind of car I drove, what kind of house I lived in, how much money I had in the bank, but the world may be a better place because I made a difference in the life of a child.
  • I often wonder about teachers who educated famous people such as Einstein, Abraham Lincoln, and the like. Were these teachers specially qualified to inspire their students to achieve fame and success? Or were these teachers just plain lucky to have exceptionally talented students? Do some teachers have the rare quality of turning dust into gold? The answer may not be easy to find.

Monday, August 22, 2011

The real face of ANNA HAZARE

Anna Hazare  supports Raj Thackeray’s Marathi Manoos Xenophobia.

He even praised the Lalit Modi’s Govt as Development model who oversaw the 2002 anti Islamic people’s incidents.
He very much supports the existence of the caste system. He further says that if caste system is there every village will be self reliant. This man practice the above rule in his model village .

He supports the anti-reservation moods of the people.

the above words are written by Arunthathi Roy in the Hindu – center page article.
the Hue and Cry raised by the people is just like those who jump in joy when india win a cricket tournament and cry bitterly when the same people lose a tournament. it’s a kind of crowd psychology.
If somebody go against the crowd he will be stamped as a rebel. You can say 99% of the people  who gathered in RamLila Maithan will be bribing in small ways to achieve their day to day official works. Because they are that much hasty that’s why they are behind him.
It is very much unfortunate that the former elite police official Kiran Bedi is heading the crowd.

Tuesday, August 9, 2011

நேனோ டெக்னாலஜி- ஓர் அறிமுகம்

இது ஒரு புதுவிஞ்ஞானம். எப்படின்னா, எந்த வஸ்துக்களையுமே, அணு அளவில அனுகிபார்த்தீங்கன்னா, அதிலருந்து உண்டாகிற பொருட்கள், அது ஆர்கானிக்காவோ இல்ல இனார்கானிக்காவோ எப்படி பட்ட வஸ்துவையும் அதன் அணு அமைப்பில போயி மடக்கி புடிச்சாச்சினா, அதான் இந்த நேனோ டெக்னாலஜி. மிகச்சிறிய குட்டி சாமன்கள், நம்ம பேசற செல்போன்லருந்து, ரேடியோ, கம்ப்யூட்டர், இத்யாதிகள் எல்லாம் நம் கையடக்கத்துக்குள் வரும் சமாச்சாரம்.

முதல்ல இந்த நேனோன்னா என்னா அப்படின்னு நீங்க கேட்கிறது புரியுது. அதாவது அளக்கிற சமாச்சாரம். ஒரு மீட்டர் நீளத்தை எவ்வளவு சின்ன சின்னதா கூறு போடமுடியுமோ அவ்வளவு கூறு போடுங்க, அதாவது ஒரு பில்லியன் கூறு, என்ன மில்லியன் பில்லியன்னு அமெரிக்கா காரன் மாதிரி பேசறேன்னு பார்க்கிறீங்களா, பில்லியன்னா, ஒன்னுக்கு அப்புறம் ஒரு ஒன்பது சைபர் போட்டு வரும் தொகை தான் அது, அவ்வளவு கூறு , அதாவது நம்ம ஊரு கணக்குக்கு 100 கோடி. ஆக ஒரு மீட்டர் நீளத்தை 100 கோடியால வகுத்தா, அதாவது 100 கோடி பாகத்தில ஒரு பங்குத்தான் நேனோன்னு சொல்றது. அந்த நீளத்திலதான் இனி எல்லாம். இந்த நீளத்தில தான் அணுக்கள் இருக்குது. அதாவது ஒரு 10 ஹைட்ரஜன் அணுக்களை வரிசையா அடுக்கினா வரக்கூடிய நீளம் தான் அந்த நேனோ நீளம். ம்.. இப்ப புரிஞ்சுதா, எங்கப்பாரு சொலறமாதிரி ஒரு படி பாலு குடிக்குனும் போல, இத்த விளக்கிறதுக்குள்ள!

ஆக இனி வரும் செய்பொருட்கள் எல்லாம் இந்த நீள அகலத்தில வரபோகுது. அந்த மாதிரி கொண்டுவர தொழில்நுட்பம் தான் இந்த நேனோ டெக்னாலஜி. இந்த டெக்னாலஜியால வரக்கூடிய புரட்சி, அந்த காலத்தில நடந்த தொழில் புரட்சிக்கு சமமா வரப்போவதா எல்லாரும் பேசிக்கிறாங்க! 'இனி ஜகம் அகம் எல்லாம் நம் உள்ளங்கை அளவில்' ன்னு நம்மாளுங்க மாதிரி கவிதை எழுத வேண்டியதுதான். இந்த தொழில் புரட்சி, எப்படி இன்னய தேதிக்கு எல்லா துறைகளிலும் வரபோகுதுங்கிறதை கொஞ்சம் விளக்கமா பார்க்கலாமா?

முதல்ல, நமக்கு பூமியிலருந்து கிடைக்கிற இந்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, அவ்வளவு சுலபமா வெளியில கொண்டுவரமுடியற சமாச்சாரமில்ல. பூமி குள்ள எல்லாம் மண்ணுடேயும், தண்ணியோடயும் தான் இந்த எண்ணைய் வளங்க கலந்து கிடக்கு. அத சாமார்த்தியமா பிரிச்சு, தனியா எண்ணெய்ய பிரிச்சு பிறகு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்ப ஏகப்பட்ட செலவு. அதத்தான் நம்ம ஊரு ONGC, OIL ங்கிற கம்பெனிங்க செஞ்சுக்கிட்டுருக்கு. ஆனா இந்த நேனோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த எண்ணெய்களை பிரிச்செடுக்கிற வித்தை வந்திருச்சு, இதுனால என்ன புண்ணியம்னு கேட்கிறீங்களா, இன்னெக்கு கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60 டாலருக்கு மேலே விக்குது, இந்த தொழில்நுட்ப புண்ணியத்தால, இந்த எண்ணெய் உற்பத்தி பண்ணக்கூடிய விலை குறைஞ்சு, நாலைக்கு நீங்க பெட்ரோல் ஸ்கூட்டருக்கு போட லிட்டர் 25-30 ரூவா குள்ள வர வாய்ப்பிருக்கு. ஏன்னா, அணு அளவில தண்ணி, மண்ணு எல்லாம் சமம்மா பிரிக்க கூடிய சாமான்கள் இந்த நேனோ டெக்னாலாஜியால கண்டுபிடிக்கபட்ட பொருட்களால செய்யப்பட்டு, அதை சுலுவா பிரிச்சி போட உதவபோவது. இதுக்கு மேலே இதை பத்தி தெரிஞ்சுக்குணும்னா, இணையத்தில நிறைய ஞான சுரங்கமே இருக்கு! போய் கூகளை உட்டு ஒரு தட்டு தட்டுங்க, வந்து கொட்டும்!

அடுத்தது மருத்துவத்தில எப்படி உபயோகம்னு பார்க்கலாமா! நீங்க சயின்ஸ் ஃபிக்ஸன் மூவி பார்க்கிற ஆளா இருந்தா, அந்த காலத்தில படம் பார்த்திருப்பீங்க, சிலபல டாக்டருங்க, தங்களை சின்ன உருவமாக்கிக்கிட்டு, வியாதியஸ்தன் உடம்புல ஒடற ரத்தக்குழாய்குள்ள புகுந்து, ரத்த தேங்கி அடச்சிருக்கிறதை திறந்துவிட்டு, அவனை குணமாக்கி, அவங்க வெளியில வந்து பழயபடி தங்க உருவத்துக்கு வந்துடுவாங்க. என்ன, எஸ்ஜே சூர்யா மாதிரி நியூ படக்கதை சொல்றேன்னு நினைக்காதீங்க. இது இப்ப உண்மையாலுமே நடக்க போகுது. இந்த நேனோ டெக்னாலஜியால செய்யப்பட்ட சின்ன ரோபோட்டுகளை உடம்புகுள்ள புகுத்தி, அது எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துடும், வெளியில இருந்து நம்ம ரிமோட் கன்ட்ரோல்ல இயங்கி, அத்தனையும் கச்சிதமா முடிச்சிடும். இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரின்னு சொல்றாங்கள்ள, அதெல்லாம், நிமிஷத்தில, நெஞ்ச கிழிக்காம இதயத்தில அடைப்பு எல்லாம் நீக்கவும், அப்புறம் இந்த கேன்சர் வந்தா, அந்த கேசர் செள்ளுங்களை மட்டும் அழிச்சிட்டு வரத்துக்கும் இது பயன்பட போகுது, அப்படியே புல்லரிக்கிதில்லை! இதுதான் அந்த நேனோ டெக்னாலஜியின் மகிமை! இப்ப உடனடியா, 'LabNow Inc'ங்கிற கம்பெனி ஒன்னை கண்டுபிடிச்சிருக்காங்க இந்த தொழில் நுட்பத்தை உபயோகிச்சு, அது என்னான்னா, சும்மா விஷிட்டிங் கார்ட் மாதிரி இருக்கிற சென்சர்ல ஒரு துளி ரத்ததை வச்சிட்டா, அது ரீடர்ல போட்டு எடுத்த ஒரு நிமிஷத்தில உங்க ரத்ததில இருக்கிற வெள்ளை அணுக்கள் அளவை கரக்டா சொல்லிடும் . அதவச்சு மேற்கொண்டு மத்த ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க டாக்டர்ங்களுக்கு உதவும் ஒரு டெஸ்ட் இது. இப்ப வழக்கமா செய்ற மாதிரி லேப்ல கொடுத்து செய்ய குறைஞ்சது பல வாரங்கள் ஆகலாம். (டாக்டர் அம்மா, அய்யாங்க யாராவது, இதெ கன்ஃபார்ம் பண்ணி பின்னோட்டம் போடுங்க!, ம்.. அப்படியாவது இத்த படிச்சு பின்னோட்டம் போடறாகளான்னு பார்ப்போம்!)

அடுத்து இந்த தொழில்நுட்பத்தால செய்யப்பட்ட ஸ்ட்ரக்சரல் பொருட்கள், அதாவது மூல பொருட்கள். இந்த மூல பொருட்களை வச்ச இனி செய்ய போற காருங்க, ஆட்டோமொபைல், லேப்டாப் கம்ப்யூட்ருங்க எல்லாம், கனம் கம்மியாவும் அதிக சக்திவாயந்ததாகவும் இருக்கும், அதுனால இந்த கார், மற்றும் ஆட்டோமொபைல் தொழில்ல ஒரு புது புரட்சியே வரப்போகுது.

அடுத்தது நம்ம அன்றாடம் உபயோகபடுத்த போற எலெக்ட்ரானிக்ஸ்ல எப்படின்னு பார்ப்போம். மொத்த எலெக்ட்ரானிக்ஸ்க்கும் மூலப் பொருள், செமிகண்டக்டர்னு, அந்த பொருளை இந்த நேனோ டெக்னாலாஜியில உருவாக்கப்பட்ட பொருட்களால செஞ்சு, அதிசியக்ககூடிய சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர், மற்றும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் எல்லாத்திலயும் புரட்சி வரப்போகுது. எப்படின்னா, இப்ப உள்ள பொருட்கள் எல்லாம் எலக்ட்ரான்களை அதிவேகமா அனுப்புனாலும் அந்த வேகம் ஒளியின் வேகம், அதாவது வேகத்தின் எல்லை 'wavelength of light' வரத்தான். ஆனா இந்த எல்லையை உடச்சிக்கிட்டு, வேகமா போகக்கூடிய 'quantum mechanics'ல வர 'quantum dots' கணக்கான பொருட்களால செஞ்சு போடறதால, வேகம் அதிகமாகும். இந்த வேகம் கூடினா, இப்ப இருக்கிற கம்ப்யூட்டரை விட பல மடங்கு அதி வேகம் செயல்படக்கூடியது, ஆனா உருவம் சிறுத்திருக்கும்.( எப்பா, கணணி படிச்ச புண்ணியவான்களா, கொஞ்சம் உதவிக்கு வந்து, மில்லியன், ட்ரில்லியன் இன்ஸ்ட்ரக்ஸன் பர் செகண்டு, கணக்கில, பொதுஜனங்களுக்கு இத பத்தி விளக்குங்கப்பா, உங்க பின்னோட்டத்தை போட்டு! இல்லேன்னா, கவுண்டமணிகனக்கா, அய்யா இப்ப என்ன சொல்றர்னு கேட்க, உச்சி வெயில் மண்டையை பொளக்குதுங்கிறாருங்கிற கதையா போயிடும்!)


இந்த தொழில்நுட்பத்தை உபயோகிச்சு, 'சாம்சங்'கிற கொரிய நாட்டு கம்பெனி, 2006ல ஒரு டிவி ஒன்னு தயாரிச்சு வெளியில வர இருக்கு. அது இந்த நேனோ ட்யூப்ல செஞ்சது. அதல பார்த்தா, சிம்ரனும், ஜோதிகாவும் சும்மா பளிச்னு தெரிவாங்க! அப்படி. இப்பவே, எல்சிடி, பிளாஸ்மான்னு, ஹை டெபனிஷன் டிவின்னு, கண்ணை கவரும் கலர்கள்ல பெரிய பெரிய டிவி வந்து கலக்குது. ஆனா இந்த டிவி வந்த அவ்வளவு தான்.. எல்லாமே கண்ணை பறிக்கும்!

ஆக இந்த நேனோ டெக்னாலஜி இது வரை ஆராய்ச்சிக்கூடத்தில தான் இருந்து வந்தது. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளி வரத்தொடங்கிருக்கு. இது ஒரு பெரிய விஸ்வரூபம் எடுத்து, புது உலகத்தை நமக்கு காண்பிக்க போகுது. அதை பார்க்கும் தூராம் நமக்கு வெகு தொலைவில்லை!
மன்னிக்கவும் இது என்னுடைய பதிவு அல்ல நேனோ டெக்னாலஜி பற்றி ஓரளவு புரியும் வகையில் எழுதப்பட்ட வலைப் பதிவு. http://ukumar.blogspot.com/2006/04/blog-post_06.html

Samacheer Kalvi StaleMate comes to a halt.

Today the final verdict in "samacheer Kalvi" is given in favour of new book.
Parents are heaved a sigh of relief at last.
  
    It is unnecessary steps taken by the new government. We can't make sky to earth
changes when come to power. The earlier govt. also elected by the govt. More over "samacheer Kalvi"
is implemented after arriving a resolution in the assembly. If we indulge in making changes in the
earlier govt.'s decision, we can't do anything. The following regular things were not followed in
the govt. schools only because of the "samacheer Kalvi" chaos.
1. Teacher's couselling for Transfer is not conducted so for.
2. Promotion to the eligible teachers is not given.
3. List of newly upgraded schools were not announced.
4. Exam related steps were not taken(SSLC).
5. CRC Training programs were not conducted.
6. I Mid Term exam was not conducted to the classes upto 10th.(It Must have been conducted
   for the bridge course syllabus at least)

Monday, July 11, 2011


சிசிஆர்டி(Center for Cultural Resources and Training) ஹைதராபாத்தில் ஒரு மாதம்

            சிசிஆர்டி யின் மூலம் வழங்கப்படும் ஒரியன்டேஷன் கோர்ஸில் ஒருமாத பயிற்சிக்கு அரியலூர் மாவட்டத்தில் இருந்து  செல்லவேண்டியவர்கள் மறுத்ததால் அந்த வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்பட்டது. நானும் எனது நண்பர் செல்வராஜ் அவர்களும் சென்று வந்தோம்
     நமது கலை பண்பாடு சம்மந்தமாக நிறைய வகுப்புகள் நடத்தப் பட்டன. ஆனால் இந்தியர்களின் ஒட்டு மொத்த பண்பாடு என்பது குறித்து பேசியவர்கள் அனைவருமே வேதத்தையே துணைக்கு அழைத்தனர். இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களின் பண்பாடு மத கோட்பாடு குறித்து ஒருவரும் பேசவில்லை. இஸ்லாமியர்கள் நடத்திய படையெடுப்புகளால் நமது பண்பாடு ஓரளவிற்கு பாதிப்புக்குள்ளானது என்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட ஆரியர்களின் ஊடுருவலால் இந்தியா வெங்கும் பரவியிருந்த திராவிட உயர் பண்பாடு முற்றிலும் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்பதும் சரியே.
     இந்திய பொது பண்பாடு பாரம்பரியம் என்று எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியா மாதிரியான மிகப்பெரிய புவியியல் அமைப்பு கொண்ட நாட்டை ஒரு குறிப்பிட்ட பண்பாடு மற்றும் பாரம்பரியத்துக்குள் அடைப்பது கடினம். அப்படி அடைத்தால் நமது பண்பாட்டு வளம் மிக வறியதாக கருதப்படும். எனவே மாநில வாரியான மொழிவாரியான மற்றும் இன வாரியான வேறுபட்ட பண்பாட்டினை வரவேற்று அங்கீகரித்து வளர்ப்பதே சிசிஆர்டி போன்ற அமைப்புகளின் தலையாய கடமையாக இருக்கவேண்டும். அதை விடுத்து இந்தியாவெங்கும் நிறைந்து இருக்கும் ஒரே பண்பாடு எது என்பது போன்ற வினாக்களை தொடுத்து அதற்கு விடையாக இந்துத்துவ கோட்பாடுகளை இந்திய பண்பாடு என்று திணிக்க முயலக் கூடாது. இவ்வாறான வகுப்புகள் நடைபெற்றதால் தான் பயிற்சிக்கு வந்திருந்த காஷ்மீர் மற்றும் நாகாலாந்து ஆசிரியர்கள் தங்களை இந்தியாவிலிருந்து அந்நியப்பட்டவர்களாக உணர்ந்தனர். ஏனெனில் இந்தியர்களின் பொது கலாச்சாரம் என்று கூறப்பட்ட அனைத்தும் மதரீதியிலான விஷயங்கள்தான். இந்திய கலை பண்பாட்டு மேம்பாடு என்கிற போர்வையில் நடத்தப்பட்ட அனைத்து வகுப்புகளுமே இந்துத்துவ பிரச்சார கூட்டங்கள் போலவே அமைந்தன.
     பயிற்சியில் பாராட்டத்தக்க ஒரு அம்சம் என்னவெனில் டாக்டர் புருஷோத்தம் ரெட்டி அவர்களின் 3 மணி நேர சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு வகுப்புதான். மிகவும் அருமையாக இருந்தது.

Monday, April 4, 2011

ஆசிரியர்கள் என்னதான் செய்வது என்று சொல்லுங்களேன்!!

நண்பர் ஒருவர் மூலம் கேள்விபட்ட ஒரு சம்பவம் இது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது நடந்ததாக கூறினார்.



இந்த சம்பவம் மாவட்டக் கல்வி அதிகாரி ஒரு கூட்டத்தின் போது கூறியதாக நண்பர் கூறினார்.அது என்னவென்று தானே கேட்கிறீர்கள்



சொல்கிறேன்.



பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, இயற்பியல் தேர்வு நாள். நாம் ஹீரோ பெயர் சரத்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)



தேவையான அனைத்துபாடப் பகுதிகளையும் நிலைநிறுத்தி தேர்வுக்கு முழு தயார் நிலையில் தேர்வு அறை செல்கிறார். பாடப் பகுதியை



மனதில் நிலை நிறுத்தி என்று நினைத்து விடாதீர்கள். அவர் தனது பேண்ட்டின் உள்ளே காலைச் சுற்றி இரப்பர் பேண்ட் போட்டு அதனுள்



பாடப் பகுதி சார்ந்த துண்டுச் சீட்டுகளை அடுக்கடுக்காக வைத்திருந்தார். சற்றேறக் குறைய ஒரு காலுக்கு 20 வீதம். அவற்றிற்கான



இன்டெக்ஸ் எதுவும் இருந்ததா என தெரியவில்லை.



மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையிலான பறக்கும் படை தேர்வு அறைக்குள் நுழைகிறது. நமது ஹீரோ பரபரப்படைகிறார்.



இதனை அதிகாரி கண்ணுற்றார். தன் அனுபவத்தின் வாயிலாக சம்மந்தப் பட்ட மாணவர் மேல் சந்தேகம் திரும்ப மாணவரிடத்தில்



வருகிறார். பேப்பரின் அடியில் ஒரு முழுதாள் அளவிலான பாடப்பகுதி இருந்தது.



”தம்பி சற்று எழுந்து என்னுடன் அலுவலகம் வரையில் வா!” என்று அதிகாரி கூறினார்.



”சார், இந்த ஒருமுறை மன்னித்து விடுங்கள் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்னை விட்டுவிடுங்கள்”, சரத்குமார்



”தம்பி உன்னை எதுவும் செய்யப் போவதில்லை சற்று அமைதியாக என்னுடன் வா, கண்டிப்பாக நீ தேர்வு எழுத அனுமதிக்கிறேன்



பயப்படாதே”, அதிகாரி.



”சார் இவனை அலுவலகத்திற்கு அழைத்து செல்லுங்கள்” என்று முதன்மைக் கண்காணிப்பாளரிடம் கூறிவிட்டு மாவட்டக்கல்வி



அதிகாரி மற்ற அறைகளை பார்வையிட தயாரானார்.



சிறிது நேரத்தில் ” ஐயோ ஓடிவிட்டான் புடிங்க, புடிங்க”, என்று முதன்மைக் கண்காணிப்பாளரின் கூச்சல் பள்ளி முழுவதும்



எதிரொளித்தது.



அனைவரும் அவர் நின்ற இடத்திற்கு ஓடினர், அது பள்ளியின் சுற்றுச் சுவர் ஓரம். கிட்டதட்ட அவர் உயரம் உள்ள சுவர்.



மாணவன் அதனை ஒரே ஜம்பில் தாண்டி கம்பி நீட்டியிருக்கிறான் என்பது தெளிவானது. அவர் அச்சுவரை ஏறவும் முடியாமல் செய்வதறியாது



திகைத்து நின்று கொண்டிருந்தார்.



உடனே பள்ளி வாயிலுக்க அனைவரும் விரைந்தனர். மாவட்டக் கல்வி அதிகாரி தன்னுடன் வந்த பறக்கும் படை உறுப்பினரை



மாணவனை பிடித்துவர அனுப்பினார். அவர் அங்கு பைக்கில் சென்று கொண்டிருந்தவரிடம் நிலைமையைக் கூறி அவனை பிடிக்கச் சென்றார்.



பள்ளி ஊரின் நடுவில் இருந்ததால் மாணவன் தெருவுக்குத் தெரு புகுந்து ஓடினான். மா.க.அதிகாரியும் தனது ஜீப்பில் தொடர்ந்தார். மேலும்



அங்கு வந்த அந்த மாணவனின் ஆசிரியரையும் உதவிக்கு அழைத்துக் கொண்டனர்.



அந்த சமயத்தில் அனைவரின் அதிர்ச்சியையும் மேலும் அதிக படுத்தும் விதமாக சரத்குமார் அங்கு மாடு கட்ட பயன் படுத்தப் பட்ட



கயிற்றையும் அவிழ்த்துக்கொண்டு ஓடினான். அனைவரும் பின் விளைவுகளை எண்ணி அதிர்ச்சியில் உறைந்தனர்.



தொடர்ந்து ஓடிய சரத்குமார் இறுதியாக ஒரு வீட்டினுள் பதுங்கினான். அனைத்து ஆசிரியர்களும் வீட்டிற்கு வெளியில் இருந்து



அவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அங்கு இருந்த அவனது ஆசிரியர் ”டேய் சரத்குமார், டீ.இ.ஓ விடம் நான் கூறுகிறேன்



தயவு செய்து வெளியே வா! கண்டிப்பாக நீ தேர்வு எழுதலாம்” என்று கூறினார்.



அதற்கு ”நான் உன்னை நம்ப மாட்டேன், நீ அப்படித்தான் கூறுவாய் வந்தால் மாட்டி விட்டுவிடுவாய்” என்று ஒருமையில் கூறினான்.



சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண்மணி ”சார் தான் இம்புட்டு சொல்லுறாறே நீ போயேண்டா” என்று கூறினார்.



அதற்கு” ஒனக்கு தெரியாதுக்கா அவன்களை பற்றி. நான் இப்போ தற்கொலை செய்து கொள்ளத்தான் போகிறேன். அவன்களை



கம்பி எண்ண வைத்தால் தான் அவன்களுக்கு புத்தி வரும்” என்று ஏக வசனத்தில் கூறினான்.



வெளியில் நின்ற அனைவரும் மிகுந்த பதட்டத்தில் இருந்தனர். சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் இதற்கு



முடிவு கட்டும் விதமாக பின்புறமாக சென்று அவனை பிடித்துக் கொண்டனர். அவனிடம் மாவட்டக் கல்வி அதிகாரி உள்ளிட்ட அனைவரும்



”நீ வந்து தேர்வு எழுதினால் போதும் சற்று உடனே வா, கிட்டதட்ட ஒருமணி நேரம் கடந்து விட்டது” என்றனர்.



”நான் எதுவும் படிக்கவில்லை புத்தகம் வைத்து தேர்வு எழுத அனுமதித்தால் தான் வருவேன்” என்று அடம் பிடிக்க



அதற்கும் சம்மதித்து அவனை தேர்வு கூடத்திற்கு ஒருவழியாக அழைத்து வந்தனர்.



அவனை ஆசுவாசப் படுத்துவதற்காக மா.க.அதிகாரி அவனுக்கு தண்ணீர் வழங்குமாறு கூறினார். அவன் தொடர்ந்து 6 டம்ளர்



தண்ணீர் குடித்தான்.



அவனை பிடித்து வந்து தேர்வு எழுத வைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்த ஆசிரியர்கள் அனைவரும் 12 டம்ளர் தண்ணீர்



குடித்தனர். நிலைமை இப்படி இருக்க மாணவர்களை நாங்கள் எப்படித்தான் கண்டிப்பது. ஒரு வேளை அவன் இறந்திருந்தால் பத்திரிக்கைகள்



அனைத்தும் மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்களை கொடூரமானவர்களாக சித்தரித்து அசிங்கப் படுத்தியிருக்கும். இத்தனைக்கும்



துண்டுத்தாள் வைத்து தேர்வு எழுதிய அவனை பிடிப்பது மற்றும் விசாரிப்பதும் தேர்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டுத்தான்.



”ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயந்தது பழங்காலம்,



மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயப்படுவது நவீனகாலம்”

Monday, March 28, 2011

ஓய்வு பெறும் வயதுவரையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் பணி - ஒரு ஆய்வு

சமீபத்தில் ஒரு பையன் கிணற்றில் மூழ்கி இறந்துவிட்டான். அவனது சடலத்தை மீட்க

தீயணைப்பு படையினர் வந்தனர். அவர்களைப்பார்த்து நான் அதிர்ந்து போய்விட்டேன். ஏனெனில் அவர்களில்

இருவர் ஓய்வு பெறும் வயதின் மிக அருகில் இருந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்து பையன் சடலத்தை மீட்பது

இயலாத காரியம்.நல்ல வேளையாக அவர்களில் ஒருவர் சமீபத்தில் பணியில் சேர்ந்தவர் இருந்தார். அவர்தான்

கிணற்றில் இறங்கினார். இறுதியாக சுற்றிலும் இருந்தவர்களின் பெருமுயற்சியால் தான் சடலம் மேலே கொண்டு

வரப்பட்டது.



ஒரு வேளை கடுமையான தீயணைப்புப் பணியோ அல்லது இக்கட்டான மீட்பு பணியோ செய்ய வேண்டி

இருப்பின் ஓய்வு பெறும் வயதில் இருக்கும் அவர்களைக் கொண்டு என்ன செய்வது?



ஓய்வு பெறும் வயது வரையில் ஒரே பணியில் ஒருவர் இருப்பது எப்படி நியாயமாகும். ஏதேனும்

பதவி உயர்வு இருந்தால் தான் பணிக்காலம் மிகவும் சுவாரசியமாக செல்லும். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு

காவல் துறை ஆகிய துறைகளில் நல்ல உடற்கட்டோடு இருக்கும் இளம் வயதினர் இருப்பதே பயனளிக்கும்.



இப்படி சொல்வதால் நான் வயதானவர்களுக்கு எதிரானவன் என்று கருதி விடாதீர்கள். வயது முதிர்வுக்கு

ஏற்ப அத்துறையில் இருப்பவர்களை திட்டமிடல்,ஆராய்ச்சி மற்றும் பயிற்சி என்று அத்துறையிலேயே பிரிவுகளை ஏற்படுத்தி

அவர்களின் அனுபவ அறிவினை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அத்துறையின் பணி துள்ளியமாகவும்

மேம்பட்ட தரத்துடனும் விளங்கும்.



நீங்களே கற்பனை செய்து பாருங்கள், 58 வயதை நெருங்கும் ஒருவர் தீயணைப்பு வாகன ஏணியில் வேகமாக

பீய்ச்சி அடிக்கும் நீர்க்குழாயினை பிடித்துக் கொண்டிருப்பது என்பது எவ்வளவு அபாயமான ஒன்று.



எனவே தீயணைப்பு மற்றும் மீட்பு துறையை நவீனமயமாக்கினால் அந்தத் துறையும் மற்ற துறைகளைப் போல்

உலகத்தரத்தில் விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

Thursday, March 24, 2011

Free bies announced by the political parties election manifesto

In this election also kalaingar started his election campaign with lot of free bies to the people.

Giving such things serve any good to the people ? definitely no.

After seeing his election manifesto Ms Jayalalitha also announced a lot more than her counter part.

One thing I want to share is that they are going to face the election together with other parties in their respective alliance. Then a common minimum program should be adopted and that should be declared as their election manifesto. Any how this time a coalition govt is going to rule tamil nadu.

To top it all I would like to say Instead of giving the things free to the people, enable them or empower them to buy those things or lot more with their own earned money. Give them employment. Introduce lot of small scale industries in every village and employ the unemployed people there give them fair pay. so that they will be able to buy those things by their own money. They will no longer expect your "alms". Never try to make the people beggers. Don't suppress their self respect. These kind of election gimmicks can't with stand longer.

Tuesday, March 22, 2011

Farewell party to my 10th students Batch 2010-20112

Tomorrow 23.03.2011 Farewell party arranged by our 10th students.

* This year little bit of satisfaction that all of my students may pass out in maths. But in English I put maximum effort to make all students pass. Some of regularly irregular late bloomers may fail in English. Which is a bit of worry for me.

* Discipline wise they are very good. They all obeyed our discipline related restrictions. one or two cases are registered under inf actuation related issues. But I lightly chided the related students with fitting words later no follow up issues.

* Cooperation among students are quet good. They helped one another when needed. I noticed one or two situations reminding the Kural "udukkai izhanthavan kai pol ange idukkan kalaivatham natpu".

* one Noteworthy thing is that students used to have nick name. "suruthi"(in vadivel voice like "pokkiri" may bring you laughter, "appatha"( pasanga movie), I gave one boy a name "sangi mangi"(pokkiri movie). we share these things in some lighter moments and enjoyed with the students.

*One of my class students name "kirubakaran" is 10 C leader. He is a boy of very much leadership quality. Who make me lot of works easier. I need not say anything to him but he used to take his duties himself and finish it in time. When I try to say him to do a work he stood accomplished. Really a nice boy who will surely have a nice future 'mark my words'

* In all the way This academic year was very nice to me and my colleagues. We all enjoyed to work with this batch.

Thursday, February 24, 2011

இஞ்சினியரிங் மோகம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆபத்தா?

அனைத்து பெற்றோர்களும் அதிக மதிப்பெண் அறுவடை செய்யும் தங்கள் பிள்ளைகளை

இஞ்சினியரிங் அல்லது மருத்துவம் படிக்க அனுப்பி விடுகிறார்கள். எனவே

அடிப்படை அறிவியல் பிரிவுகளில் சேரும் மாணவர்கள் சொற்ப மதிப்பெண் பெறும்

மாணவர்கள்தான்.

பொறியியல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை

கிடைத்து விடுவதில்லை. நிறைய பேர் டிப்ளமோ சான்று பெற்றவர்களுக்கான

வேலை கிடைத்தாலும் போதும் என்று சொற்ப சம்பளத்தில் வேலை செய்து

வருகின்றனர்.

ஆனால் அடிப்படை அறிவியல் துறையானது நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு

வாய்ப்புகளை வாரி வழங்கும் துறையாகும். ஆராய்ச்சி அளவில் தற்போது

நிறைய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு அறிவியல் ஆராய்ச்சிக்கு அரசு

ஊக்கம் அளித்து வருகிறது. ஆராய்ச்சி செய்யும் ஸ்காலர்களுக்கு அவர்கள்

வேலைக்கு சென்றாலும் சம்பளமாக கிடைக்காத பெரிய தொகையை அரசு

அவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதாமாதம் வழங்கி வருகிறது. மேலும்

ஆராய்ச்சிக்கு பின்னரும் அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

எனவே நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல் கல்வி வாய்ப்புகளின்

குவியல் என்பதில் ஐயம் இல்லை.

Tuesday, January 18, 2011

சபரிமலைப் பயணம் தேவைதானா?


இன்றைய செய்தித்தாளில் முக்கிய செய்தியாக இடம் பெற்றுள்ளது சபரிமலைவிபத்து.
     உலகமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும்!? இறைவனை சபரிமலையில் மட்டுமே காண இயலும் என்று கருதும் பக்தி போதை ஏறியோர் ஏறுவது சபரிமலை.
     விலைவாசியைவிட விறுவிறுவென்று ஏறுவது எது தெரியுமா? வருடா வருடம் சபரிமலை ஏறும் பக்தர் கூட்டம்தான்! விரைவில் திருப்பதி “வெங்கி“ தனது நம்பர் 1 இடத்தை ஐயப்பனிடம் இழக்கலாம். ஆனாலும் திருப்பதி செல்வது சொகுசாக அமையும் வண்ணம் அங்கு பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சபரிமலையில்? வருடாவருடம் நடக்கும் விபத்துகள் தான் இதற்கு பதில். இவ்வளவு துன்பத்தையும் மீறி லட்சக்கணக்கானோர் சபரிமலை செல்வது ஏன்? தன்னைத் தானே வருத்திக் கொள்வோருக்கே எனது உதவிகள் கிடைக்கும் என்று இறைவன் சேடிஸ்ட் போல் ஏதும் நிபந்தனை விதித்துள்ளாரா? இல்லை பின் ஏன்? படியுங்கள்.

1. ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நமது கஷ்டங்கள் தீர்ந்து விடாதா என்கிற பகுத்தறிவுக்கு புறம்பான எண்ணங்களுக்கு ஆட்படும் மக்கள் அங்கு செல்ல எண்ணுகின்றனர்.
2. இறைவனின் சிம்பத்தி யை பெற்று இறைவனை கைவசப்படுத்தி தாம் நினைத்த்தை சாதிக்கும் மக்கள் அங்கு போகின்றனர்.
3. சிலருக்கு “வின்னர்“ பட வடிவேல் கூறுவது போல் “கட்டம் சரியில்லாமல்அதற்கு நிவர்த்தி பரிகாரம் செய்ய ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்பட்டு செல்கின்றனர்.
4. “குருவி உட்கார பனங்காய் விழுந்த்து“ என்பது போல் தானே (சொந்த முயற்சியால்) விளையும் நன்மைகளை இறைவனின் கருணை என எண்ணி எப்போதோ செய்த வேண்டுதலுக்கு நேர்த்திக்கடன் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு செல்கின்றனர்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக தவறான வழிகளில் ஈட்டிய பொருளில் பாதியை காணிக்கை என்று கூறிக்கொண்டு இறைவனுக்கு கொடுத்து இறைவனையும் தனது திருட்டில் கூட்டாளியாக்குகின்றனர்.
மேற்காணும் பல வகைகளில் மக்கள் இம்மாதிரி இடங்களுக்கு செல்கின்றனர்.மொத்தத்தில் அனைவருமே தன்னம்பிக்கை என்னும் முதுகெலும்பற்ற ஜீவன்கள் தான்!

   மேலும் ஐயப்பனை சபரிமலையில் மட்டும்தான் காண இயலுமா? அவரை பிரதியெடுத்து வைத்துள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் ஏராளம் உள்ளன. அங்கெல்லம் செல்வது மிகச்சுலபம் மட்டுமல்லாமல் வருமானம் தமிழ்நாட்டிற்கே கிடைக்கும். அதை விடுத்து லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு மட்டுமே சென்று பல்வேறு விதமான விபத்திற்கு ஆளாவது ஏன்? ஒவ்வொரு வருடமும் “சபரிமலை சென்ற பக்தர்கள் விபத்தில் பலிஎன்ற செய்திகள் வராமல் இல்லை.
   மகர ஜோதி தரிசனம்என்ற மக்களை முட்டாள்களாக்கும் மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றி லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி விபத்துகள் நடக்க காரணமாக இருக்கும் நிர்வாகத்தினை கேட்க யாரும் இல்லை. ஏனெனில் இங்கே 100க்கு 99 பேர் பகுத்தறிவு இல்லாத குருடர்கள்.

    எனவே யாரும் சபரிமலை செல்ல வேண்டாம்! தூணிலும் துரும்பிலும் இருப்பதாக கூறப்படும் இறைவன் குறைந்தபட்சம் தமிழக எல்லைக்குள் கூடவா இல்லை? அங்கே சென்று வருவாயை தமிழகத்திற்கு செலவிடுங்கள் உங்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது.

எருமை மறம் - மௌனன் யாத்ரிகா

நூல் - எருமை மறம் ஆசிரியர் - மௌனன் யாத்ரிகா பதிப்பகம் - நீலம் விலை - ரூ.200 நூலாசிரியர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரியலூர் கலைக...