Saturday, April 30, 2016

முந்திரித்தோப்பும் மாலைநேர படிப்பும்.


நாடு நகரம் மாட மாளிகை எல்லாம் விட்டு வனவாசம் சென்ற ராம்ஸ்&கோ மன நிலையில் பரீட்சை சமயத்தில் நாங்களும் புத்தகத்தோடு வனவாசம் புகுவதுண்டு. நண்பர்கள் அனைவருமே தாங்கள் அமரும் முந்திரி கிளையையே ரொம்ப சவுகரியமானதாக கொண்டு படிப்பில் மூழ்கிவிடுவர். எனக்கோ புரிந்த பாடம் அதிக நேரம் எடுக்காது புரியாத பாடம் படிக்கப் பிடிக்காது. நான் ஒவ்வொருவனுடைய கிளையையும் கேட்டு கேட்டு மாற்றி பொழுது போக்கிக் கொண்டே கிளைமாக்ஸ்க்காக காத்துக் கொண்டிருப்பேன்.

அது என்ன கிளைமாக்ஸ்?!! பக்கத்து மாந்தோப்பு, வெள்ளரிக்காய் போன்று புளிப்பற்ற மொறு மொறு ஒட்டு மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்த்து பாரம் தாங்காமல் தரையோடு தேய்ந்தபடி தொங்கும். கேட்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா?! அதனால் தான் அந்த தோப்பின் firewall(முள் வேலி) ஐ தாண்டி மரத்தை hack செய்து போதுமான அளவுக்கு மட்டும் download செய்து கொள்வோம். ஆமாம் it's an ethical hacking.
அதனால் தான் அந்த வனவாசம் செல்ல அனைவரும் ஆவலோடு இருப்போம். வழியில் எங்களை புத்தகத்தோடு பார்ப்போரெல்லாம் என்னை காட்டி 'இப்படி  படிக்கிற பிள்ளை கூட கூடினாதான உருப்புடலாம். இப்ப பாக்க எம்புட்டு ஆசையா இருக்கு!' என்று சகட்டு மேனிக்கு புகழ்ந்து தள்ளுவார்கள். நாங்கள் நமட்டு சிரிப்போடு கடந்து போவோம்.

No comments:

Post a Comment

கணக்கு ஏனப்பா இவ்வளவு கஷ்டமா இருக்கு?!

சமீபத்தில் கணித பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். "எனக்கும் கணக்குக்கும் அப்போதில...