Wednesday, October 17, 2018

அறிவியல் கட்டுரையாளர் திரு என்.இராமதுரை அவர்கள் மறைவு



கொல்லிமலை ஹில் டேல் பள்ளியில் வேலை பார்த்தபோது ஒரு முறை புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த பீரோ வை திறந்து ரகம் வாரியாக புத்தகங்களை அடுக்கிக் கொண்டு இருந்த போது விண்வெளி சார்ந்த புத்தகம் (செய்தித் தாளில் வந்ததை கத்தறித்து பைண்டிங் செய்யப்பட்டது) ஒன்று கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தால் வேலை மற்றும் சாப்பாட்டு நேரம் நீங்கலாக மற்ற எல்லா நேரமும் அந்த புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன். அது அப்பல்லோவின் தோல்வியடைந்த விண்வெளித் திட்டம் பற்றியது. புத்தகத்தின் எழுத்து நடை அவ்வளவு எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
அந்த காலகட்டத்தில் இராமதுரை அவர்கள் தினமணியில் அவ்வப்போது எழுதுவார். அவரது கட்டுரைகளுக்காகவே கொஞ்சநாள் தினமணி வாங்கினேன். பிறகு “அறிவியல்புரம்” என்ற வலைப்பூ (www.ariviyal.in) வில் எழுதி வந்தார் .
“அறிவியலில் கடினமான கருத்துக்கள் என்று எதுவும் இல்லை, ஆனால் அதை எளிமையாக எடுத்தியம்ப வல்ல ஆட்களுக்குத்தான் பற்றாக்குறை” என்று கூறுவார்கள். இராமதுரை அவர்களின் கட்டுரைகள் எனக்கு விண்வெளி, அணுவிஞ்ஞானம் மற்றும் சில இயற்பியல் சார்ந்த விஷயங்களில் பேரார்வத்தை ஏற்படுத்தித் தந்தது என்றால் மிகையில்லை.
அவரது இறப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு பேரிழப்பு. அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...