Tuesday, April 28, 2026
சேப்பியன் சரித்திரம்
நூல்: சேப்பியன் சரித்திரம் - மனித பரிணாமமும் எஞ்சு நிலை உறுப்புகளும்
நூலாசிரியர்: சிவக்குமார் சியாமளா ரவி
பட்டினி கிடந்தா புற்றுநோய் செல்கள் உணவில்லாமல் அழிந்து போகும், மாட்டுச் சாணத்தை பூசிக்கிட்டா ரேடியேஷன் தடுக்கப்படும், வெங்காயத்தை வச்சுக்கிட்டா வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக்கலாம், மாட்டு மூத்திரத்தில் மிகப்பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு என்றெல்லாம் போலி அறிவியல் சுற்றி வளைத்து தாக்கி மக்களின் அறிவை மழுங்கடிக்க முயற்சி செய்யும் வேலையில் நாம் மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய கட்டாய கடமை இருக்கிறது.
அந்த வகையில் அறிவியல் புலத்தில் எழுதப்படும் சுவாரசியமான நூல்களை நாம் பெருவாரியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும், மேலும் அறிவியல் புலத்தில் எழுதி வருபவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்த நூலை வெளியிட்டவர்கள் வாலறிவன் பதிப்பகம். நூல் வெளியிடும்போது இந்த நூலின் உள்ளடக்கம் குறித்து நமக்கு ஒரு கியூரியாசிட்டியை ஏற்படுத்தி வாங்க தூண்டும் வகையில் மிக சிறப்பாக தொடர் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் செய்திருந்தனர்.
நமக்கு தற்போது இருந்து வரும் எஞ்சுநிலை உறுப்புகளை பரிணாம வளர்ச்சியோடு தொடர்பு படுத்தி பேசும் 29 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது.
இப்போ சைவம் சுத்த சைவம் என்று பெருமையா பீற்றிக் கொண்டிருக்கும் பயலுகளாம் யாரு அந்த காலத்துல வெறும் மாமிசத்தை தின்று கொண்டு இருந்தவன் தானே!!
வேட்டையாடி மாமிசம் சாப்பிட்டு பிறகு தாவர உணவுகளை சாப்பிட்ட விஷயங்களையும் அப்படியே விவசாயத்துக்கு நகர்ந்த செய்திகளையும் பரிணாமம் வழியாக கோடிட்டு காட்டுகிறது முதல் அத்தியாயம்.
பரிணாம வளர்ச்சி என்பது தேவையையும் சூழ்நிலையையும் பொறுத்து அமைவது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ள "குள்ள யானைகளும் பிரம்மாண்ட எலிகளும்" என்கிற அத்தியாயம் வாசித்தபோது வியப்பு மேலிடாமல் இல்லை.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் அந்த கால மனித ரோமங்கள் பிறகு ரோமங்கள் உதிர்ந்து தோல் அவற்றில் மெலனின் உற்பத்தி வைட்டமின் டி தேவை போன்ற இந்த சிக்கலான வலையமைப்பு நமக்குள் எவ்வாறு சிவப்பு தோலையும் கருப்பு தோலையும் உருவாக்கி நிற வேறுபாட்டுக்கு காரணமாக அமைந்தது என்பதை மிக சுவாரசியமாக விவரிக்கிறது ஒரு கட்டுரை. மற்றபடி சிவப்பு உசத்தி கருப்பு மட்டம் என்பதெல்லாம் மனிதர்களின் ஆதிக்க மனப்பான்மை மற்றும் வணிக விளம்பரங்களால் நேர்ந்த கொடூரமான பிழை என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
மனித குல வரலாற்றைப் பற்றி கூறும் கட்டுரைக்கு "மனிதர்களின் மாயாண்டி குடும்பத்தார்" என்ற தலைப்பை சூட்டியதன் மூலம் நூலாசிரியரின் நகைச்சுவை உணர்வை அறியலாம்.
நமது விக்கலுக்கு பின்னாலும் ஒரு பரிணாம கதை இருக்கத்தான் செய்கிறது என்பதையும் நூல் சொல்கிறது.
Palmar grasp reflex என்பது என்ன தெரியுமா பிறந்த குழந்தைகளிடம் கையை கொடுத்தவுடன் கப்பென்று கெட்டியாக பிடித்துக் கொள்கின்றன அல்லவா அதற்கு பின்னால் உள்ள பரிணாம சங்கதி தான்.
நம்மைப் பொறுத்தவரை நமக்கு தெரிந்த எஞ்சு நிலை உறுப்பு என்றால் குடல் வால் தான் ஏனென்றால் வலி வரும் போது அதை வெட்டி கிடாசி விடுகிறோம் என்கிற அளவில் நமக்கு அது தெரியும். அதைப்பற்றிய ஒரு கட்டுரையும் நூலில் உள்ளது.
தாவரங்களை கடிக்கப் பயன்படுத்திய கடைவாய்ப் பல்லைத் தான் தற்போது ஞானப்பல் என்று கொண்டாடுகிறோம். வலி எடுத்தால் பிடுங்கி எறிந்து விடுகிறோம்.
உங்களை யாரும் முள்ளம்பன்றி என்றால் கோபித்துக் கொள்ள கூடாது ஏனென்றால் முள்ளம் பன்றியின் ஓர் அம்சம் நமக்கும் உள்ளது அது என்ன என்பதையும் நூலில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பூமியில் உயிரினங்கள் கடலில் தோன்றி பிறகு நிலத்துக்கு நகர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து இந்த நிலையை எட்டியுள்ளோம். அதில் மீனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பின் விட்ட குறை தொட்ட குறையாக இருப்பது தான் மூக்குக்கும் உதட்டுக்கும் இடையே உள்ள லேசான பள்ளம் (philtrum).
110 பக்கங்கள் மட்டுமே உள்ள இந்த நூலை ஆர்வத்தோடு அமர்ந்தோமானால் ஒன்றரை மணி நேரத்தில் வாசித்து விட முடியும்.
மிஸ்டர் ஜி கே வீடியோ எப்படி நமக்கு மிக சுவாரசியமாக அறிவியல் கருத்துக்களை எடுத்து கூறுமோ அது போல நமக்கு பிடித்தமான நண்பர் நமது பக்கத்தில் அமர்ந்து அறிவியல் கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூறுவது போல அமைந்துள்ளது இந்த நூல். மிஸ்டர் ஜி கே இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
குழந்தைகளுக்கு பரிசாக வழங்கவும்,பள்ளி நூலகத்தில் வைக்கவும், அறிவியல் ஆர்வலர்களுக்கு பரிசளிக்கவும் இந்த நூல் மிகவும் பொருத்தமான ஒன்று.
நான் வெளியீட்டின் போதே ஐந்து காப்பிகள் வாங்கி விட்டேன். நூல் கைக்கு வந்த அன்றே ஒருவருக்கு பரிசாகவும் வழங்கி விட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
சேப்பியன் சரித்திரம்
நூல்: சேப்பியன் சரித்திரம் - மனித பரிணாமமும் எஞ்சு நிலை உறுப்புகளும் நூலாசிரியர்: சிவக்குமார் சியாமளா ரவி பட்டினி கிடந்தா புற்றுநோய் செல்க...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா…. ”ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலி சல சல சல வென சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே ...
உண்மையில் மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மை குறைவு சார்
ReplyDelete