உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான கணித ஆசிரியர்களுக்கான
புத்தாக்கப் பயிற்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. ஆசிரியர்களிடம்
பொதுவாக இருக்கவேண்டிய Code of Conduct பற்றி பயிற்சி அளிக்கப் பட்டது.
நான் கருத்தாளர்களில் ஒருவராக சென்று பயிற்சி அளித்தேன். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு
100க்கு 100 மார்க் வாங்க எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது குறித்து பேசினேன். மேலும்
வினா எண் வாரியாக பொதுத்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை பட்டியலிட்டு அனைவருக்கும் வழங்கினேன்.
அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் வாங்கிக் கொண்டனர். எனது வியப்பு என்னவென்றால் நான் செய்தது
வெறும் வினா வகை பகுப்பாய்வு தான் அதனை யார் வேண்டுமானாலும் செய்ய இயலும். ஆனாலும்
இம்மாதிரியான வேலையை முன்னெடுத்து செய்ய அனைவரும் சுணக்கம் காட்டுகின்றனர்.
மேலும் ”கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் ஆகிய நான்கு கணித செயல்பாடுகள் தெரிந்தாலே
ஒரு மாணவனை 100க்கு 100 மார்க் வாங்க வைத்துவிட முடியும். மாணவனின் முழு ஈடுபாடும்
ஆசிரியரின் முழு ஈடுபாடும் இருந்தால் கண்டிப்பாக அதனை சாத்தியப்படுத்த இயலும்“. என்ற எனது
கருத்தினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
கணக்கு ஏனப்பா இவ்வளவு கஷ்டமா இருக்கு?!
சமீபத்தில் கணித பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். "எனக்கும் கணக்குக்கும் அப்போதில...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment