Monday, January 10, 2011

ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி 08.01.2011

உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான கணித ஆசிரியர்களுக்கான

புத்தாக்கப் பயிற்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. ஆசிரியர்களிடம்

பொதுவாக இருக்கவேண்டிய Code of Conduct பற்றி பயிற்சி அளிக்கப் பட்டது.

நான் கருத்தாளர்களில் ஒருவராக சென்று பயிற்சி அளித்தேன். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 

100க்கு 100 மார்க் வாங்க எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது குறித்து பேசினேன். மேலும்

வினா எண் வாரியாக பொதுத்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை பட்டியலிட்டு அனைவருக்கும் வழங்கினேன்.

அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் வாங்கிக் கொண்டனர். எனது வியப்பு என்னவென்றால் நான் செய்தது

வெறும் வினா வகை பகுப்பாய்வு தான் அதனை யார் வேண்டுமானாலும் செய்ய இயலும். ஆனாலும்

இம்மாதிரியான வேலையை முன்னெடுத்து செய்ய அனைவரும் சுணக்கம் காட்டுகின்றனர்.

மேலும் ”கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் ஆகிய நான்கு கணித செயல்பாடுகள் தெரிந்தாலே

ஒரு மாணவனை 100க்கு 100 மார்க் வாங்க வைத்துவிட முடியும். மாணவனின் முழு ஈடுபாடும்

ஆசிரியரின் முழு ஈடுபாடும் இருந்தால் கண்டிப்பாக அதனை சாத்தியப்படுத்த இயலும்“. என்ற எனது

கருத்தினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...