Wednesday, June 25, 2025
Sincostan டிகிரி -1
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தது, ரொம்ப எல்லாம் பயமுறுத்தாமல் உரையாடல் வடிவில் பெரிய அளவில் கணித குறியீடுகள் எல்லாம் இல்லாம கணக்க பத்தி எழுதினா எப்படி இருக்கும்?!
முக்கியமா பசங்க சில கணக்குப் பிரிவுகளை பார்த்து மரண பீதி அடைவாங்க ஆனா அது அப்படி ஒன்னும் பெரிய வில்லனா இருக்காது பக்கத்துல போய் பார்த்தால் கைப்புள்ள தான்.
அடிப்படைய தெரிஞ்சிக்காம நேரடியா மோதி பார்த்து மண்டைய ஒடச்சிக்கிறது தான் பிரச்சனை.
மேலும் கோணங்களையும் தூரங்களையும் அடிப்படையாகக் கொண்ட முக்கோணவியல் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்று ஆசை.
Sincostan டிகிரி -1
"சார் கணக்குல எனக்கு அலர்ஜி என்றால் இந்த trigonometry தான், அதுவும் இந்த sinθ cosθ கண்டாவே காண்டாவுது"
"தம்பி உன்னோட பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மெண்ட் வீக்கு"
"என்னங்க சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க?!"
"ஆமா கோணம் அப்படின்னா என்னன்னு தெரியுமா உனக்கு?!"
"இந்த முக்கோணத்தில் எல்லாம் 30 டிகிரி 40 டிகிரி அப்படின்னு சொல்லுவாங்களே அதுதானே?!"
"அப்படின்னா முக்கோணம் இல்லாத இடத்தில் கோணமே வராது அப்படித்தானே?!"
"ஆமா சார் ம்ம்... இஇ.. இல்ல சார்?!"
"ஆமாவா இல்லையா?!"
"தெரியல சார்?!"
"கோடு அப்படின்னா என்னன்னு தெரியுமா"
"அப்படியே ஸ்கேல் வச்சு இழுத்தா கோடுதான் சார்!!"
"கணக்கு புத்தகத்தில் அப்படித்தான் படிச்சியா டா?!"
"ஙே...."
"தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாம போய்கிட்டே இருந்தா கோடு இரண்டு பக்கமும் அம்புக்குறி போட்டிருக்கும்"
"ஆங், ஆமா சார் இப்போ ஞாபகம் வந்துருச்சு"
"அப்படியா சரி கதிர் னா என்னன்னு சொல்லு"
"ஆங்.. கதிர் நா முரளி வைத்து இதயம்னு ஒரு படம் எடுத்தாரே அந்த டைரக்டர் பேர் சார், அந்த படத்துல கூட "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"ன்னு அருமையான பாட்டு இருக்கும்"
" அட நாசமா போன எடுபட்ட பயலே நீ சரியான சினிமா பைத்தியம் டா"
"தொடக்கப்பள்ளி இருக்கும் ஆனால் முடிவு புள்ளி இல்லாமல் போய்க்கிட்டே இருக்கும் அதுக்கு பேருதான் கதிர்"
"சாரி சார் இப்ப ஞாபகம் வந்துடுச்சு தொடக்க புள்ளியும் இறுதி புள்ளியும் இருந்தா அதுக்கு பேரு கோட்டுத்துண்டு சார் இப்ப வண்ட்டனா?!"
"சரி சரி இப்போ ரெணடு கதிர்கள் ஒரே புள்ளியில் இருந்து கிளம்பி போனா அந்த முனைப் புள்ளியில் இருக்கிற கேப் இருக்கு இல்லையா அதை நம்ம அளந்துதான் கோணம் னு சொல்றோம்"
"அப்படின்னா கதிர கேப்புல இருக்குற தொலைவுன்னு சொல்லலாமா சார்?!"
"இல்ல இல்ல தப்பா புரிஞ்சுகிட்டே நீ தெளிவா சொல்றேன் பாரு ஒரு கதிரை நிலையா வச்சுக்கிட்டு இன்னொரு கதிர அந்த கதிர் மேலே இருந்து எழுப்பி முனையை மையமாக வைத்துக்கொண்டு சுழட்டுனா நமக்கு வட்டம் கிடைக்குது இல்லையா பாதி சுழட்டுனா அரைவட்டம் முக்கால்வாசி சுழட்டுனா முக்கால் வட்டம் முழுசா சுழட்டுனா முழு வட்டம். ஆக இந்த வட்டத்தை 360 சமபாகங்களா பிரிக்கிறோம் அப்புறம் சுழற்சிக்கு ஏத்த மாதிரி அந்த 360 ங்குற அளவு குறையும் ஆக அந்த கேப்போட தொலைவுன்னு நம்ம எடுத்துக்க கூடாது. அதனாலதான் இதை டிகிரியில் குறிக்குறோம். ஒரு முழு வட்டம் வந்ததுக்கப்புறம் திரும்பவும் 0 தொடங்கி 360 வரைக்கும் நம்ம எவ்வளவு தூரம் அத சுழட்டி இருக்கோம் அப்படிங்கறதுதான் கோணம்"
"ஓக்கே சார்"
"அதனாலதான் கதிர் தொடங்குற முனையில் அஞ்சு சென்டிமீட்டர் தொலைவில் இருந்து அளந்தாலும் 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்து அளந்தாலும் இல்ல அஞ்சு லட்சம் கிலோமீட்டர் பக்கத்தில் இருந்து அளந்தாலும் கோணம் மாறாது"
"அப்படியா சார்"
"ஆமா இதுல இன்னும் நிறைய சுவாரஸ்யமான மேட்டர் இருக்கு அடுத்த பகுதியில பார்ப்போம்"
Subscribe to:
Post Comments (Atom)
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...

-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment