Monday, October 24, 2016

அய்யோ எல்லாம் போச்சே.....

பொங்கி வரும் வெடிச் சிரிப்பை அடக்கி இருக்கிறீர்களா?
பொங்கி வரும் காட்டாற்றை அணைக்கட்டி அடக்குவதைக் காட்டிலும் பொங்கி வரும் சிரிப்பை அடக்குவது சற்ற சிரமமான காரியந்தான்.
சமீபத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது நடந்த சம்பவம். ஒரு இளைஞன் அரசாங்க சாராயக்கடையில் சாராயப்புட்டி வாங்கிக் கொண்டு வந்தான்.

தனது இரு சக்கர வாகனத்தின் டேங்க் கவரில் அதை நுழைத்தான். பொசுக்கென்று உள்ளே சென்றுவிட்டது. அது வெளியே தெரியாமல் உள்ளடங்கி போய் விட்டதில் அவனுக்கு திருப்தியில்லை. அதனால் அதனை சற்று உயர்த்தி சாய்வாக்கி அதன் கழுத்து வரை வெளியே தெரியும் படி வைத்து நாலு பேர் பார்க்கும் படி செய்து தனது கவுரவத்திற்கு பங்கம் வராதபடி பார்த்துக் கொண்டான். (முன்பெல்லாம் நாப்கினுக்கு அடுத்தபடியாக பிரவுன் கவர் சுற்றி வாங்கி செல்லும் பொருள் சாராய பாட்டில் தான். வாங்கினாலும் லுங்கியால் மறைத்தோ அல்லது பட்டா பட்டி டவுசரில் வைத்தோ மறைத்து எடுத்து செல்வார்கள்)

பக்கத்து கடைக்கு சென்று சாராயம் அருந்த தேவையான ”அக்சஸரீஸ்” வாங்க சென்றான். வாங்கி திரும்பும் போது “டமார்“ என்று ஒரு சத்தம். பார்த்தால் “டேங்க்“கவரில் வைத்த சாராய பாட்டில் ஏற்றி வைக்கப் பட்ட போது அங்கிருந்த துவாரம் வழியாக நழுவி இருக்கிறது (பயபுள்ள கவனிக்கல போலிருக்கு!). அது உடைந்ததும்  உடைந்த பாட்டிலையும் கையில் இருந்த ”அக்சஸரீஸ்” ஐயும் அவன் பரிதாபமாக பார்த்த போது தான் எனக்கு சிரிப்பை அடக்க வேண்டிய சங்கடமான சூழல் உண்டானது. இருந்தாலும் வீட்டிற்கு வந்து பாத்ரூம்  கதவை சாத்திக்கொண்டு ஒரு இரண்டு நிமிடம் சிரித்து தீர்த்தேன்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...