Saturday, July 8, 2017

தேன் தமிழ்

2011 ம் ஆண்டு ஜூன் மாதம் முழுவதும் CCRT (CENTRE FOR CULTURAL RESEARCH AND TRAINING)ல் orientation course ல் கலந்து கொண்டேன். தமிழகத்தில் இருந்து 8 ஆசிரியர்கள் ( 2 பெண் ஆசிரியர்கள்) கலந்து கொண்டோம். அரியலூர் மாவட்டத்தில் இருந்து நானும் எனதருமை நண்பரும் கணித ஆசிரியருமான செல்வராஜ் ம் கலந்து கொண்டோம். 28 நாட்களும் நல்ல அனுபவம். காஷ்மீர், நாகாலாந்து, ஜார்கண்ட், உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா வில் இருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பல்வேறு மாநில ஆசிரியர்களுடன் அவரவர் மாநில கல்வி முறை மற்றும் ஆசிரியர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை பற்றி எல்லாம் கலந்துரையாடினோம். அந்த நினைவுகள் யாவும் பசுமையாக உள்ளன. அவற்றில் இருந்து பகிரத்தக்க சுவாரசியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று உள்ளேன்.
சமஸ்கிருதம் பெரிதா தமிழ் பெரிதா?
CCRT ல் பல வகுப்புகளில் சமஸ்கிருதத்தையும் இந்து மத கலாச்சாரங்களையும் தூக்கிப் பிடிக்கும் நபர்களே சிறப்பு அழைப்பாளர்களாக வந்து தங்கள் கருத்துக்களை வழங்கினர். அப்போது ஸ்ரீராமக்கிருஷ்ணன் என்கிறவர் பொறுப்பு இயக்குநராக இருந்தார்.
ஒரு பல்கலைக் கழக ஆங்கில பேராசிரியர் ஒருவர் வந்து மொழிகள் சார்ந்த வகுப்பை போதித்தார். எங்கே தொடங்கினாலும் சமஸ்கிருதப் பெருமையில் வந்து முடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
திடீரென தமிழ் பற்றியும் கூறினார். அடடே என்ன சொல்லப் போகிறார் என நிமிர்ந்து அமர்ந்தோம்.
“Tamil also borrowed lot of words from Sanskrit” (தமிழ் மொழியும் கூட நிறைய வார்த்தைகளை சமஸ்கிருதத்தில் இருந்து பெற்றிருக்கிறது) என்றார்.
நான் உடனே “Objection sir”( யார்கிட்ட எத்தனை தடவ “விதி“ ஒலிச் சித்திரத்தை அந்த காலத்தில் டேப் ரெக்கார்டரில் கேட்டிருக்கிறேன்)
அவர் பதறிப் போய் “yes yes what sir” என்றார்
“நீங்கள் ஒரு நூறு வருடங்களில் எழுதப்பட்ட நூல்களைக் கொண்டு பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்த தொண்ணூறு விழுக்காடு எழுத்தாளர்கள் பிராமணீயர்கள். அவர்கள் வழக்கத்தில் வைத்திருந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ அல்ல தெரியாமலோ தமிழோடு கலந்து எழுதி விட்டார்கள். அந்த இலக்கியங்களை மட்டுமே எடைபோட்டு இந்த முடிவுக்கு வருவது சரியாகாது. எங்கள் இலக்கியங்களுக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே, எழுதப்பட்ட இலக்கண விதிகளை கொண்ட எங்கள் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வார்த்தைகளை பெற்று பிழைத்து வருவதாக தாங்கள் கூறுவது பொறுத்தமன்று. இடையூருக்கு வருந்துகிறேன்” என்று கூறிய உடன் தமிழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து மாநில ஆசிரியர்களும் கரகோஷம் எழுப்பினர்.
அந்த பேராசிரியரும் உடனே “ ஆமாம் தமிழும் சமஸ்கிருதம் போலவே ஒரு செம்மொழி“ என்று கூறி அடுத்த தலைப்புக்கு தாவினார்.
#நிகழ்வுகளின் பகிர்வு தொடரும்.

No comments:

Post a Comment

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...