Monday, March 3, 2025

தலைநகரம் - 1

என்றைக்கு இந்த தலைப்பை அறிவித்தேனோ அன்றிலிருந்து தொடர்ந்து வேலை பளு அதிகமாகவே இருந்தது. சரி இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று இன்றைக்கு தொடங்கி விட்டேன். தலைநகரம் - 1
அறிமுகம் NIEPA - NATIONAL INSTITUTE OF EDUCATIONAL PLANNING AND ADMINISTRATION என்கிற ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு கல்வி மேலாண்மை சார்ந்த பல்வேறு படிப்பகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. மேலும் கல்வி மேலாண்மையில் புதுமையை புகுத்தும் அலுவலர்களுக்கு விருது கொடுப்பது மட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சிறப்பான செயல்பாடுகளை கேஸ் ஸ்டடியாக எடுத்து அது சார்ந்து கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் கல்வி மாநாடுகள் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. பள்ளி மேலாண்மை குறித்த ஒரு மாநாட்டிற்கு டிசம்பர் மாதத்தில் ஒரு விளம்பரம் வந்திருந்தது எனது நண்பர் விஜயகுமார் அதை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். பார்த்தவுடன் சரி உடனே அப்ளை செய்து விடுவோம் என்று வேகமாக நினைத்து அதே வேகத்தில் மறந்தும் போய் விட்டேன். அதன் பிறகு ஒரு நாள் அந்த விளம்பரம் போட்டோ கேலரி ஸ்க்ரோலிங் பண்ணும் போது கண்ணில் பட்டது. பார்த்தால் அன்றுதான் இறுதி தேதி. சரி சார் நம்மீது நம்பிக்கை வைத்து அனுப்பி வைத்திருக்கிறார் நாம் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்று கணினியை திறந்து அப்போது எனது கணினியில் உள்ள எங்கள் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள் சார்ந்த படங்களை எடுத்து ஒவ்வொன்றுக்கும் தலைப்பை ஒட்டி ஒரு பத்தி எழுதி முழு கட்டுரையாக தொகுத்து படங்கள் அனைத்தையும் அன்று மாலை 5 மணிக்கு மின்னஞ்சலில் சேர்த்து விட்டேன். நாம் ஏனோதானோவென்று ஒரு கட்டுரை அனுப்பி இருக்கிறோம் நிச்சயமாக நமக்கு அழைப்பு இருக்காது என்கிற எண்ணத்தில் இருந்தேன், ஆனால் ஒரு இன்ப அதிர்ச்சி போல மாநாட்டுக்கு அழைப்பு வந்துவிட்டது. அடுத்த சிக்கல் என்னவென்றால் மாநாடு ஜனவரி 8-10 டெல்லியில் நடக்கிறது ஜனவரி மாத டில்லி குளிர் எப்படி இருக்கு என்பது எல்லோரும் அறிந்ததே!! போகலாமா வேண்டாமா என்று மனது ஊசலடிக் கொண்டே இருந்தது. அப்பொழுது குளிருக்கு பயந்து இங்கேயே போகவில்லை என்றால் எதிர்காலத்தில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல முடியுமா (ஹி ஹி 😂 😂) அதனால் இப்போதே ஒரு ட்ரையல் பார்த்துவிடலாம் என்று துணிந்து விட்டேன். குளிர்காப்பு உடைகள் மற்றும் புதிய ஷுக்கள் ( 2019 க்கு பிறகு ஷு அணிவதே இல்லை) என பர்ச்சேஸ் செய்து விட்டேன். தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு தலைமையாசிரியர் தேர்வாகியிருந்தார் அதோடு மட்டுமில்லாமல் புதுச்சேரியிலிருந்தும் இரண்டு பேர் தேர்வாகியிருந்தனர் ஆக நாலு பேர் நாலு விதமாக தமிழில் பேசிக் கொள்ளலாம் என்கிற சந்தோஷத்தோடு பயண ஏற்பாடுகளை செய்யத் துவங்கினேன்.

No comments:

Post a Comment

மகளிர் தின சிறப்பு பதிவு

மகளிர் தின சிறப்பு பதிவு சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சம...