Monday, August 16, 2010

சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 2010


இன்று எங்கள் பள்ளியில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வழக்கமாக விழா கொண்டாடப்படும் மைதானம் மழையால் சேதமடைந்ததால் விழாவானது ஓட்டுக் கட்டிட முற்றத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கங்கைகொண்டசோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை வங்கி மேலாளர் அவர்கள் வழங்கினார். மாணவர்களின் வழக்கமான எதிர்பார்ப்பிற்கிணங்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவ மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்று விழாவிற்கு அணி சேர்க்கும் வண்ணம் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சண்முகம் அவர்கள் சென்ற ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியர்கள் இ.சிலம்பரசி (ஓ 475ஃ500) மற்றும் ப.அகிலா (ஓஐஐ 1034ஃ1200) வுக்கு பரிசு வழங்கினார். விழாவின் இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...