Thursday, August 26, 2010

பால் எவ்வாறு பொங்குகிறது?

பாலில் கொழுப்பு மற்றும் நீர் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். பால் சூடேற்றப்படும் போது கொழுப்பு படலமாக பாலின் மேல் பகுதியில் படர்ந்து விடுகிறது. மேலும் சூடேற்றப்படும் போது பாலில் உள்ள நீர் ஆவியாகிறது. ஆவி மேல் நோக்கி இடம் பெயர முயலுகிறது. ஆனால் கொழுப்பு படலம் ஆவியை உள்ளேயே இருக்கச் செய்கிறது. மேலும் மேலும் பால் சூடேற்றப் படும் போது நீராவி முழு வேகத்துடன் கொழுப்பு படலத்தை மேலே தூக்கிய படி மேல் நோக்கி வருகிறது. எனவே பால் பொங்கி வழிகிறது

No comments:

Post a Comment

கரும்பலகை – எஸ்.அர்ஷியா

சமீப நாட்களாக முழு நீளமாக ஒரு நூலை ஒரே சிட்டிங்கில் வாசிப்பது என்பது சற்று சிரமமான காரியமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்ப...