Thursday, August 26, 2010

பால் எவ்வாறு பொங்குகிறது?

பாலில் கொழுப்பு மற்றும் நீர் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். பால் சூடேற்றப்படும் போது கொழுப்பு படலமாக பாலின் மேல் பகுதியில் படர்ந்து விடுகிறது. மேலும் சூடேற்றப்படும் போது பாலில் உள்ள நீர் ஆவியாகிறது. ஆவி மேல் நோக்கி இடம் பெயர முயலுகிறது. ஆனால் கொழுப்பு படலம் ஆவியை உள்ளேயே இருக்கச் செய்கிறது. மேலும் மேலும் பால் சூடேற்றப் படும் போது நீராவி முழு வேகத்துடன் கொழுப்பு படலத்தை மேலே தூக்கிய படி மேல் நோக்கி வருகிறது. எனவே பால் பொங்கி வழிகிறது

No comments:

Post a Comment

நெருங்கி விலகும் பருவம் – வளரிளம் பருவத்தின் மனநலம்

நூலாசிரியர் – டாக்டர் சிவபாலன் இளங்கோவன் உயிர்மை பதிப்பகம். டாக்டர் சிவபாலன் இளங்கோவன் அவர்களுடைய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஹோட்டல்...