Thursday, December 1, 2016

பொய்யும் புரட்டும் எதற்கு?!! #பழைய முகநூல் பதிவு

பொய்யும் புரட்டும் எதற்கு?!

'NASA விஞ்ஞானிகள் அறிவிப்பு
1.'சிதம்பரம் நடராஜரின் நடனமாடும் போது ஊன்றியிருக்கும் கால் பெருவிரலில் தான் ஒட்டுமொத்த புவியின் ஈர்ப்பு மையம் உள்ளது'
2. 'ஆலங்குடி கோயிலை கடக்கும் போது செயற்கைகோள்களே ஸ்தம்பித்து போகின்றன. ஏனென்றால் கோயிலின் காந்த சக்தி அப்படி.
3. பசுமாட்டின் மூத்திரத்தில் ஆண்டிபயாட்டிக் தன்மை கொட்டி கிடக்கிறது.
அடுத்ததாக விஞ்ஞானி விலாடி மீரின்(அப்படி ஒரு விஞ்ஞானி இருப்பது கூகுலுக்கே தெரியவில்லை#தட் கடல்லயே இல்லையாம் மொமன்ட்!)
ரஷ்யாவிலிருந்து வந்து நம்ம ஊர் சிவலிங்கத்தை பார்த்து வியந்து போய் ஒரு முழுநீள ஆராய்ச்சி கட்டுரை எழுதி நம்ம சோசியல் நெட்வொர்க் சயின்டிஸ்ட்களிடம் சமர்ப்பித்துள்ளார்! பாத்து ரெக்கமண்ட் பண்ணுங்க பாஸு ஒரு டாக்டரேட் வாங்கி பொழச்சிட்டு போகட்டும்!(ஆமாம் எனக்கு ஒரு டவுட்டு வழக்கம் போல், லிங்கத்தின் தோற்றம் பற்றி உங்கள் புராணங்களில் கூறப்பட்ட பலான பலான கதைகள் எல்லாம் பொய்யா பாஸூ)
வடிவ கணித பௌதிக அறிவியல் எல்லாம் கோள வடிவ பொருட்கள் அனைத்துக்கும் அதன் மையம் எங்கே இருக்கும் என தடுமாறி(!!) கொண்டு இருக்கும் போதுதான் இந்த கட்டுரை வராது வந்த மாமணி போல் கைகொடுத்துள்ளது. மெயில் பண்றேன் பரிசு வருமா இல்ல வேறு ஏதாவது வருமா?!
#மக்களின் அறிவு வளர்ச்சி பார்த்து பயந்து போன ஆன்மீக வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை தக்கவைக்க இந்தமாதிரி புரட்டுகளை அரங்கேற்றம் செய்வார்கள்!
இந்த survival techniques தான் நம்ம வீட்டில் வந்து நம்ம தலைமேலேயே உக்காந்து ஆட்டம் போட வைக்கிறது. என் தலை மேலிருந்து நான் விரட்டிவிட்டேன். அப்போ நீங்க.....!

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...