Thursday, April 25, 2019

கருந்துளை என்னும் பெருந்துளை-1



     சமீபத்தில் ஒரு செய்தி செய்தித் தாள்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. கருந்துளையை புகைப்படம் எடுத்து விட்டார்களாம்.
     ”என்னாது, ஒரு போட்டோ புடிச்சதுக்கா இவ்வளவு அளப்பறைய குடுக்குறாய்ங்க?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
     ”ஆமாம் பின்ன, ஒரு மெதுவடைய அந்தக் கால மொபைல் கேமராவுல கேவலமா எடுக்கத் தெரியாதவன் எடுத்த மாதிரி ஒரு போட்டோவ காமிச்சி பீத்திக்கிறாய்ங்களே!!”
     “சரி, சரி, டென்ஷன் ஆவாத, மொதல்ல இந்த கருந்துளை பற்றி தெரிஞ்சிகிட்டா நீயும் விஞ்ஞானிகள் செஞ்ச செயல பாராட்டுவ”
     ”ஆமாம், அது இன்னாப்பா, கருந்துளைன்னா கருப்பா ஓட்டையா இருக்குமா?”

     “முதல்ல, கருந்துளை கருப்பா இருக்கும் என்கிற எண்ணத்த மாத்திக்க அது கருப்பா ஒண்ணும் இல்ல, அது தக தகன்னு ஜொலிச்சிக்கிட்டு தான் இருக்கும், ஆனா ஒரு வேள நம்மாள பாக்க முடிஞ்சாக் கூட அது கருப்பா தான் தெரியும்”
     “இன்னாப்பா நீ ரொம்ப கொயப்புர”
     “நாம ஒரு பொருள பாக்கணும்னா வெளிச்சம் வேணும், அதாவது ஒளி அந்தப் பொருள் மேல பட்டு பிரதிபலிக்கணும்”
     ”ஆமாம்பா, அதனால தானே நம்மாள இருட்டுள ஒண்ணியும் பாக்க முடில”
     “இந்த கருந்துளை மேல ஒளி பட்டாலோ அல்லது அதுவே ஒரு ஒளியை வெளியிட்டாலோ நமக்கு தெரியாது கருப்பா தான் தெரியும், அதாவது கருப்புன்னா, அங்கிருந்து எந்த ஒளியும் நம்மள வந்து சேராது அதனால கருப்பு”
“ஒண்ணும் புரியலபா”
     “சரி, கருந்துளைய விடு, புவி ஈர்ப்பு சக்தி பற்றி ஏதாவது தெரியுமா?”
     “தெரியும்பா, இந்த நியுட்டன் மேல ஆப்பிள் விழுந்த போது அவரு பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்குனு கண்டுகினாறு, நிலா நம்ம பூமிய சுத்தறது, நம்ம பூமி சூரியன சுத்தறது எல்லாமே ஒரு ஈர்ப்பு தான் காரணம்னு இஸ்கூல்ல படிச்சிருக்கேன்பா”
     “சரி, சரி இது போதும் ஒனக்கு கருந்துளை பற்றி புரிய வச்சுடலாம்”
     “சூரியன், கோள்கள் என்று இல்லை, எந்த இரண்டு பொருள்களுக்கும் இடையில ஒரு ஈர்ப்பு இருக்கும்னு நியுட்டன் சொல்லிட்டு கையில ஒரு சூத்திரத்தையும் கொடுத்துருக்காரு”
     “அப்படியா, இந்த தரையில கிடக்குற இரண்டு கல்லுக்கும் இடையில கூட ஈர்ப்பு விசை இருக்கா, இன்னாப்பா கத உடுற”
     “ஆமாம், இருக்கு! ஆனா உணரத்தக்க அளவில் இல்லாம ரொம்பவும் குறைவா இருக்கும், அதுதான் நியுட்டன் கொடுத்த சூத்திரம்”
     “என்னாப்பா அந்த சூத்திரம் a2+b2 மாதிரியா”
     “இரண்டு பொருள்களுக்கும் இடையில் உள்ள ஈர்ப்பு அவற்றின் நிறைக்கு நேர் விகிதத்திலும் (நிறை அதிகம்னா ஈர்ப்பும் அதிகம் குறைவுன்னா, குறைவு) அவற்றிற்கு இடைப்பட்ட தூரத்தின் இருமடி(ஸ்கொயர்)க்கு எதிர்விகிதத்திலும்(நெருக்கமா இருந்து அதிக ஈர்ப்பு, தொலைவா இருந்தா குறைவான ஈர்ப்பு) இருக்கும்”
     “அதாவது, வெய்ட் அதிகமா இருந்தா நல்லா இஸ்துக்கும், அதுவே நெருக்கமா இருந்தா இன்னும் நல்லா இஸ்துகுனு இருக்கும் அதானே?!”
     “இப்போ புரியுதா பூமி ஏன் தன்னை நோக்கி ஈர்க்குதுன்னு?”
     “இது பிரியுது, ஆனா கருந்துளைன்னு சொல்லிப்புட்டு டக்குன்னு ரூட்ட மாத்திட்டியேப்பா”
     “தோ அங்கதான் வரேன், இந்த பூமி எல்லா பொருளையும் ஈர்ப்பதால் இந்த பூமிய விட்டு பிச்சிகிட்டு வெளியே போகனும்னா அதுக்கு ஒரு செகண்டுக்கு 11.2 கிமீ ஸ்பீட்ல போகணும் அது தான் பூமிக்கான விடுபடு திசைவேகம்”

     “அப்படின்னா நிலாவுக்கு ராக்கெட் விடசொல்லோ பூமிய விட்டு வெளிய கிளம்ப 11.2 கிமீ ஸ்பீட்ல போயிருப்பாங்களா”
     “அதேதான், இதுவே வியாழன்னு ஒரு கோள் (சூரியமண்டலத்திலேயே பெரிய கோள்) இருக்கு இல்லையா அந்த கோளோட விடுபடு திசைவேகம் 59.5 கிமீ”
     “அடேங்கப்பா, அப்ப வியாழன்ல இருந்து ராக்கெட் உடுணும்னா இன்னும் கஷ்டமா இருக்குமே”
     “நம்ம பூமிய விட்டு கிளம்ப 11.2 கிமீ ஸ்பீட் வேணும்ல, அதுவே 13 லட்சம் பூமிவே உள்ள வச்சி அடைக்கிற சைஸ்ல இருக்கிற சூரியன விட்டு எஸ்கேப் ஆவணும்னா எவ்வளவு ஸ்பீட் தேவைன்னு தெரியுமா?”
     “ரொம்ப அதிகமா இருக்குமே”
     “ஆமாம்,  வினாடிக்கு 618 கிமீ”
     “சரி நீ இப்போ இன்னாதான சொல்ல வர்ர, முதல்ல கருந்துளைன்ன, அடுத்து ஈர்ப்பு விசைன்ன, இப்பொ விடுபடு திசைவேகம் அதாவது எஸ்கேப் ஆவறதுக்கு தேவையான இஸ்பீடு ன்ற”
     “இதோ இப்போ கனெக்ட் பண்றேன், இந்த விடுபடு திசைவேகம் கோள்களோட எடை மட்டுமில்லாம எந்த பொருள் எஸ்கேப் ஆகி போகுதோ அந்த பொருளோட எடையையும் பொருத்தது அப்படின்னு சைன்டிஸ்ட் எல்லரும் சொல்றாங்க“
     “சரி மேல போ”
     “விடுபடு திசைவேகத்துக்கான சூத்திரத்தில் மதிப்ப அதிகமா போட்டுகிட்டே போய் பாக்குறாங்க, அப்போ ரொம்ப ரொம்ப (கற்பனைக்கு எட்டாத) அதிக அடர்த்தியும் நிறையும் உள்ள ஒரு பொருள் இருந்தா அந்த பொருள் எதையும் தப்பிக்க விடாம புடிச்சி வச்சிக்கும், ஏன் ஒளி கூட அதோட புலத்தில் இருந்து தப்பிச்சி வெளிய ஓடிவரமுடியாது அப்படின்னு கண்டு பிடிச்சாங்க”
     “ அப்படின்னா அதுல இருந்து ஒளி வரலன்னா நமக்கு அந்த மாதிரி ஒரு பொருள் இருக்கறதே தெரியாதே”
     “ஆமாம், வினாடிக்கு 3 லட்சம் கிமீ ஸ்பீட்ல போகிற ஒளி கூட தப்பிச்சி வரமுடியாத – அதாவது அந்த பொருளோட விடுபடு திசை வேகம் 3 லட்சம் கிமீ க்கும் மேல – அந்த வானியல் பொருள் தான் கருந்துளை”
     “இன்னாபா அதிசயமா கீது, அந்த மாதிரி ஒரு கருந்துளை இருக்குன்னு எப்படிப்பா கண்டுகினாங்க”
     “இன்னைக்கு இது போதும், கருந்துளை பற்றி முதல்ல யாரு கருத்து சொன்னாங்க, எப்படி அத நிருபிச்சாங்க, அப்புறம் அத எப்படி போட்டோ பிடிச்சாங்க எல்லாத்தையும் விளாவாரியா அடுத்தடுத்த பகுதியில ஆற அமர பாக்கலாம்”
     “ஐ யாம் வெய்ட்டிங் பா”

1 comment:

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...