Tuesday, January 18, 2011

சபரிமலைப் பயணம் தேவைதானா?


இன்றைய செய்தித்தாளில் முக்கிய செய்தியாக இடம் பெற்றுள்ளது சபரிமலைவிபத்து.
     உலகமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும்!? இறைவனை சபரிமலையில் மட்டுமே காண இயலும் என்று கருதும் பக்தி போதை ஏறியோர் ஏறுவது சபரிமலை.
     விலைவாசியைவிட விறுவிறுவென்று ஏறுவது எது தெரியுமா? வருடா வருடம் சபரிமலை ஏறும் பக்தர் கூட்டம்தான்! விரைவில் திருப்பதி “வெங்கி“ தனது நம்பர் 1 இடத்தை ஐயப்பனிடம் இழக்கலாம். ஆனாலும் திருப்பதி செல்வது சொகுசாக அமையும் வண்ணம் அங்கு பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சபரிமலையில்? வருடாவருடம் நடக்கும் விபத்துகள் தான் இதற்கு பதில். இவ்வளவு துன்பத்தையும் மீறி லட்சக்கணக்கானோர் சபரிமலை செல்வது ஏன்? தன்னைத் தானே வருத்திக் கொள்வோருக்கே எனது உதவிகள் கிடைக்கும் என்று இறைவன் சேடிஸ்ட் போல் ஏதும் நிபந்தனை விதித்துள்ளாரா? இல்லை பின் ஏன்? படியுங்கள்.

1. ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நமது கஷ்டங்கள் தீர்ந்து விடாதா என்கிற பகுத்தறிவுக்கு புறம்பான எண்ணங்களுக்கு ஆட்படும் மக்கள் அங்கு செல்ல எண்ணுகின்றனர்.
2. இறைவனின் சிம்பத்தி யை பெற்று இறைவனை கைவசப்படுத்தி தாம் நினைத்த்தை சாதிக்கும் மக்கள் அங்கு போகின்றனர்.
3. சிலருக்கு “வின்னர்“ பட வடிவேல் கூறுவது போல் “கட்டம் சரியில்லாமல்அதற்கு நிவர்த்தி பரிகாரம் செய்ய ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்பட்டு செல்கின்றனர்.
4. “குருவி உட்கார பனங்காய் விழுந்த்து“ என்பது போல் தானே (சொந்த முயற்சியால்) விளையும் நன்மைகளை இறைவனின் கருணை என எண்ணி எப்போதோ செய்த வேண்டுதலுக்கு நேர்த்திக்கடன் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு செல்கின்றனர்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக தவறான வழிகளில் ஈட்டிய பொருளில் பாதியை காணிக்கை என்று கூறிக்கொண்டு இறைவனுக்கு கொடுத்து இறைவனையும் தனது திருட்டில் கூட்டாளியாக்குகின்றனர்.
மேற்காணும் பல வகைகளில் மக்கள் இம்மாதிரி இடங்களுக்கு செல்கின்றனர்.மொத்தத்தில் அனைவருமே தன்னம்பிக்கை என்னும் முதுகெலும்பற்ற ஜீவன்கள் தான்!

   மேலும் ஐயப்பனை சபரிமலையில் மட்டும்தான் காண இயலுமா? அவரை பிரதியெடுத்து வைத்துள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் ஏராளம் உள்ளன. அங்கெல்லம் செல்வது மிகச்சுலபம் மட்டுமல்லாமல் வருமானம் தமிழ்நாட்டிற்கே கிடைக்கும். அதை விடுத்து லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு மட்டுமே சென்று பல்வேறு விதமான விபத்திற்கு ஆளாவது ஏன்? ஒவ்வொரு வருடமும் “சபரிமலை சென்ற பக்தர்கள் விபத்தில் பலிஎன்ற செய்திகள் வராமல் இல்லை.
   மகர ஜோதி தரிசனம்என்ற மக்களை முட்டாள்களாக்கும் மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றி லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி விபத்துகள் நடக்க காரணமாக இருக்கும் நிர்வாகத்தினை கேட்க யாரும் இல்லை. ஏனெனில் இங்கே 100க்கு 99 பேர் பகுத்தறிவு இல்லாத குருடர்கள்.

    எனவே யாரும் சபரிமலை செல்ல வேண்டாம்! தூணிலும் துரும்பிலும் இருப்பதாக கூறப்படும் இறைவன் குறைந்தபட்சம் தமிழக எல்லைக்குள் கூடவா இல்லை? அங்கே சென்று வருவாயை தமிழகத்திற்கு செலவிடுங்கள் உங்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது.

Monday, January 10, 2011

ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி 08.01.2011

உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான கணித ஆசிரியர்களுக்கான

புத்தாக்கப் பயிற்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. ஆசிரியர்களிடம்

பொதுவாக இருக்கவேண்டிய Code of Conduct பற்றி பயிற்சி அளிக்கப் பட்டது.

நான் கருத்தாளர்களில் ஒருவராக சென்று பயிற்சி அளித்தேன். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 

100க்கு 100 மார்க் வாங்க எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது குறித்து பேசினேன். மேலும்

வினா எண் வாரியாக பொதுத்தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை பட்டியலிட்டு அனைவருக்கும் வழங்கினேன்.

அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் வாங்கிக் கொண்டனர். எனது வியப்பு என்னவென்றால் நான் செய்தது

வெறும் வினா வகை பகுப்பாய்வு தான் அதனை யார் வேண்டுமானாலும் செய்ய இயலும். ஆனாலும்

இம்மாதிரியான வேலையை முன்னெடுத்து செய்ய அனைவரும் சுணக்கம் காட்டுகின்றனர்.

மேலும் ”கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் ஆகிய நான்கு கணித செயல்பாடுகள் தெரிந்தாலே

ஒரு மாணவனை 100க்கு 100 மார்க் வாங்க வைத்துவிட முடியும். மாணவனின் முழு ஈடுபாடும்

ஆசிரியரின் முழு ஈடுபாடும் இருந்தால் கண்டிப்பாக அதனை சாத்தியப்படுத்த இயலும்“. என்ற எனது

கருத்தினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

Monday, January 3, 2011

அம்தேத்கர் திரைப்படம் வந்து விட்டதா?!

இந்த வார நீயா? நானா? வில் எதார்த்த படங்களையும் மிகை எதார்த்த படங்களையும் பற்றி பேசினார்கள்

அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று இயக்குநர் ராம் கூறியது,”தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக வரும்போது

பள்ளி மாணவர்களுக்கு சிறப்புக் காட்சி நடத்தி மாணவர்களை காணுமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை

விடப்படும், இந்த நடைமுறை “அம்பேத்கார்” படத்திற்கு செயல்படுத்தப்பட வில்லை“ என்பதை அந்த

மேடையில் பதிவு செய்தார். தலித் மக்களை காப்பாற்றுவதற்காகவே கட்சியை நடத்துவதாக கூறிக்கொள்ளும்

கட்சிகள் கூட இந்த விஷயத்தில் அரசை வற்புறுத்த வில்லை என்பதுதான் அந்த படத்திற்கு பரவலாக திரையரங்குகள்

ஒதுக்கப்பட வில்லை என்பதை விட சோகம்.

Tuesday, December 21, 2010

நானோ டெக்னாலஜி

டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது டாக்ரேட் ஆராய்ச்சிக் கட்டுரை-ஐ அளிக்கும் போது ஒரு சர்க்கரை மூலக்கூறின் கூட்டணுவின் பரிமாணத்தை சுமார் ஒரு நானோமீட்டர் என்று அறிவித்தார், முதன் முதலாக நானோமீட்டர் என்னும் அளவு உலகுக்கு அறிமுகமானது. நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியன் பகுதி. ஒரு நானோமீட்டர் என்பது பத்து ஹைட்ரஜன் அணுக்களை பக்கத்தில் வைத்தால் கிடைக்கும் நீளம்." நானோ" உலகின் விதிகள், குவாண்டம் இயற்பியல் விதிகள். இவைகளை விளக்க புதிய முறைகள், கருவிகள் வேண்டும். அவைகளை சரியாக அறியும் போது வெளிப்படும் சாத்தியங்கள் மனிதனை கடவுளுக்கு அருகில் கொண்டுசெல்கின்றன. சுமார் நூறு நானோ மீட்டரில் இருந்து நானோ டெக்னாலஜி ஆரம்பிக்கிறது. படிப்படியாக அளவு குறைந்துகொண்டேபோய் ஒரு தனிப்பட்ட எலெக்ட்ரானை நம் விருப்பத்தை போல நடத்துவதுதான் இந்த இயலின் குறிக்கோள். ஆராய்ச்சி முறைகள் சில, " இது சாத்தியமே" என்கிற நம்பிக்கையை தருகின்றன. நானோ டெக்னாலஜின் ஆதார சாகசம் அணு அளவில் பொருள்களை நம் விருப்பதை போல மாற்றுவது. ஒரு பொருளின் அணுகட்டத்தை மாற்றினால் அந்தப் பொருளின் இயற்கை பண்புகள் மாறிவிடும் என்பதே இதன் அடிப்படை. உதாரணமாக, அடுபுக்கரியின் அணுகட்டமைப்பை சற்று மாற்றினால் அது வைரமாகிறது. இயற்கையில் இயல்பாக நடக்கும் இயற்கை வினைகளை ஒரு ஆராய்ச்சிசாலையில் மனிதன் செய்ய முடியும் என்று நம்பிக்கை தருகிறது இந்த டெக்னாலஜி. டெக்ஸ்லெர், மூலக்கூறு கம்ப்யூட்டர்களை வடிவமைபத்ற்கான யோசனை இயற்கையில் ப்ரோடீன் தயாரிப்பை கவனித்தால் கிடைக்கும் என்று சொல்கிறார். மேலும் ஒரு மரபணு அதற்குள்ளேயே அதன் இறுதி வடிவத்தின் செய்தியை வைத்திருப்பதை போல ஒரு கம்ப்யூட்டர் தான் இறுதியில் இந்தப் வேலை செய்யும் சாதனமாகப் போகிறோம் என்கிற அறிவை அதற்குள்ளே வைத்துவிட முடியும் என்கிறார். நூறு நானோ மீட்டரைவிட நுட்பமாக பொருள்களை தயாரிக்கும் திறமைதான் நானோ டெக்னாலஜி. இந்தத் திறமையை இரண்டு விதமாக அணுகுகிறார்கள், ஒன்று, "டாப் டவுன் " மற்றொன்று "பாட்டம் அப் ". அதாவது படிப்படியாக அளவை மாற்றிக்கொண்டே போய் "நானோ" அளவை எட்டுவது. இன்றைய தினத்தின் மைக்ரோ டெக்னாலஜி முறைகள் இந்த "டாப் டவுன்" வகையைச் சார்ந்தவை.மூலக்கூறுகள் என்னும் கூட்டணுவை ஒரு ச்விட்சாக மாற்றலாம் என்கிற யோசனை சுமார் 25 வருடங்களாக இருக்கிறது. இது சமிபத்தில் தான் நடைமுறையில் சில வேதியியல் பொறியியல் வளர்ச்சிகளினால் சாத்தியமாகி இருக்கிறது. மூலக்கூறுகள் என்னும் கூட்டணுக்கள் சில சேர்ந்து கொண்டு oxidation reduction என்னும் வேதியியல் மாற்றம் பெறும் போது ஒரு ச்விட்சாக இயங்குகிறது என்று UCLA பல்கலைகழகத்திலும், ஹியூலிட் பக்கர்டு நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். நானோ டெக்னாலஜியின் பொருள்கள் வாயு அல்லது திரவ வடிவில் இல்லாமல் அதே சமயம் திடப்பொருள்கள் போல திடமாக இல்லாமல் குறிப்பிட்ட வரிசையில் மாறக்கூடிய திடப்பொருள்கள். நானோ டெக்னாலஜியின் தயாரிப்பு முறையில், அணு அளவில் மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு பொருளை அணு அணுவாக, சீராக உற்பத்தி செய்ய முடியும் என்பது சாத்தியம் எனில் கழிவுப் பொருள்கள் இருக்காது. தொழிற்சாலைகளில் விஷ வாயுக்களை காற்றில் கலக்காமல் செயல்படுத்தலாம். விரயமான செயல்கள் இல்லாததால் ஆற்றல் அதிகரிக்கும்.
இன்றைய இந்தத் தொழில்நுட்பம் ஓர் அபரிவிதமான வளர்ச்சியை மனித வாழ்வில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

Thursday, December 9, 2010

தமிழ் நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் SSLC தேர்விற்கு கணிதப் பாடத்தில் தயாராவது எப்படி?

 மாநிலப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை 1 முதல் 42 வரை உள்ள அனைத்துக் கணக்குகளையும் குறிப்பிட்ட வரையறைக்குள் பொருத்தி விடலாம். ஏதேனும் 3 பழைய வினாத்தாள்களை வினா வாரியாக ஒப்பிட்டால் இதனை நீங்களே உணர முடியும்.
 இரண்டு மதிப்பெண் கணக்குக்ளைப் பொறுத்தவரை 7 கணக்குகள் மிக எளிது என்ற வகையில் வருகின்றன. அவற்றுடன் இன்னும் 3 கணக்குகளை சேர்த்து பயிற்சி செய்தால் கண்டிப்பாக 20 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்
 20 ஐந்து மதிப்பெண் கணக்குகளிலிருந்து ஏதேனும் 9 கணக்குகளை செய்தால் மட்டும் போதும் என்ற வகையில் வினாத்தாள் வடிவம் உள்ளது. எனவே 5 மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரை உங்களுக்கு சுலபமான 9 கணக்குகளை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தால் 45 மதிப்பெண்கள் நிச்சயம்.
 செய்முறை வடிவியலைப் பொறுத்தவரை வட்ட நாற்கரம் மற்றும் இரட்டைத்தொடுகோடுகள் கணக்குகளை பயிற்சி செய்தால் 10 மதிப்பெண்ணை உறுதி செய்து விடலாம்.
 வரைபடம் பகுதியில் நேர்மாறல் எதிர்மாறல் வரைபடம் வரைவதும் சரி கணக்கீடு செய்வதும் சரி மிகச்சுலபம் அதனை பயிற்சி செய்தாலே எந்த சிரமமும் இல்லாமல் 10 மதிப்பெண் பெற்று விடலாம்.
 1 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வகையில் மட்டுமே வரும் என்பதால் பழைய வினாத்தாட்களைக் கொண்டு தயார் செய்தால் 15 மதிப்பெண் வாங்கிவிடலாம். நண்பர்களிடையே போட்டி வைத்துக் கொண்டு 1 மதிப்பெண் வினாத்தாள் தயார் செய்து தேர்வு வைத்துக் கொள்ளலாம்
இது தொடர்பாக அட்டவணைப் படுத்தப்பட்ட எதிர்பார்க்கப்படும் வினா வகைகள் தேவைப்படின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

படித்ததில் பிடித்தது- கவிதைகள்.


நம்புங்கள்

முச்சந்தியில் விளக்கேற்றுங்கள்
தாலி பாக்கியம் தங்க
மஞ்சள், பச்சையில்
புடவை உடுத்துங்கள்.

அண்ணாமலை தீபம் அணைந்ததாம்
அடுக்கடுக்காக இனி
துன்பங்கள்தான் என்கிறார்கள்

மூத்த பிள்ளைக்கு ஆகாதாமே?
மறக்காமல் வேப்ப மரத்தில்
மஞ்சள் கயிறு கட்டுங்கள்

வீட்டுக்கு வீடு மரம் நடுங்கள்
புவியே பிழைக்காதென்றால்
புரளியாய்க்கூட
நம்புகிறார்களில்லை!



கருத்து
இந்த உலகத்திலேயே சிறந்த இசையாக ஒவ்வொருவருக்கும் தோன்றுவது, அவரவர்களின் பெயர் ஒலிக்கும் ஓசைதான். வஞ்சனை இல்லாமல் எப்போது எல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ஒருவரை பெயர் சொல்லி அழையுங்கள்.
     சபையோர் முன் ஒருவரை பாராட்டுங்கள். அவரையே கண்டிப்பது என்றால், தனிமையில் கண்டியுங்கள்.

காட்சி
காட்சி ஆரம்பித்தது
கதை நாயகி குளித்துக்கொண்டிருந்தாள்
வில்லன் அதை
விஷமத்தனமாகப்
பார்த்துக்கொண்டிருந்தான்
உன் அக்கா தங்கச்சிய
இப்படிப் பாப்பியாடா..
வசனம் பேசி
சண்டையிட்டான் கதை நாயகன்
நாயகனுக்கு நன்றி சொல்லிவிட்டு
குளிக்க ஆரம்பித்தாள் நாயகி
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்!
-நன்றி ஆனந்த விகடன்.

Wednesday, December 8, 2010

குழந்தைகள் பற்றிய எதிர்ப்பார்ப்புகளை நாம் வளர்த்துக் கொள்வது சரியா?

பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் உண்டு. அதற்காகவே அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர்களும் உண்டு. நான் பேசிப்பார்த்த வரையில் தன் குழந்தை ஓர் டாக்டராக, சாப்ட்வேர் என்ஜினியராக, ஐ.பி.எஸ் தேர்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக, ஓர் கலெக்டராக பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே பெரும்பான்மையாக உள்ளனர். சிறுவயதில் நி..றை..ய சாப்பிடும் கொழுகொழு குண்டு குழந்தையாக தன் குழந்தை இருக்க வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் மிக குறைவு. எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு தன் குழந்தை அனைத்திலும் முதல் பரிசே பெற வேண்டும் என எண்ணாத பெற்றோர்களே இல்லை எனலாம்.


ஒரே குழந்தை கொண்ட பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்ததாக உள்ளன. ஓர் தாய் தன் மகனை பாட்டு, நடனம், யோகா, கராட்டே, கீ போர்டு, கையெழுத்து, டென்னிஸ் என இன்னும் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை பெருமையாகவும் மகன் மீது தனக்குள்ள அக்கறையின் வெளிப்பாடாகவும் கூறிக்கொண்டிருக்கிறார். அப்பையனுக்கு அதிகபட்சம் 9 வயதிருக்கலாம். இந்த வயதில் இவையெல்லாம் சுமையாக இருக்குமே தவிர சுகமாக இருக்க வாய்ப்பில்லை. வெகு விரைவிலெயெ இவற்றின் மீதெல்லாம் வெறுப்பு ஏற்பட்டு நான் எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்ல மாட்டேன் என அப்பையன் கூற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பெற்றோர்களின் நேரப் பற்றாக்குறை காரணமாக சகோதர சகோதரிகளைக் கொண்ட குழந்தைகள் இது போன்ற தொந்தரவுகளிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்கிறார்கள்.


பெற்றோர்களுக்கு என்ன அனுபவங்களும் விஷய ஞானங்களும் உள்ளனவோ அதைப் பொறுத்தே அவர்கள் தங்கள் குழதைகள் பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புகளும் அமையும். இவ்வுலகில் தனக்கு தெரியாத விஷயங்களை தன் குழந்தை மீது எந்த பெற்றோரும் திணிக்க வாய்ப்பே இல்லை. நல்ல விஷயங்களுக்கும் இதுவே விதி. டாக்டர், என்ஜினியர், போலிஸ் அதிகாரி, கலெக்டர் போன்ற உத்தியோகங்களெல்லாம் அனைவருக்கும் தெரிந்தவை அதனாலேயே அதையே அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கான குறிக்கோளாக கொள்கிறார்கள். ஆனால் அதைவிட தெரியாத, அதிக சம்பாத்தியம் கொடுக்கக்கூடிய, மதிப்பும் மரியாதையும் வாய்ந்த எத்தனையோ உத்தியோகங்கள் இந்த உலகில் உள்ளன. உங்களுக்கு அவையெல்லாம் தெரியாது என்பதற்காக உங்கள் குழந்தை அவ்வுயர்ந்த உத்தியோகங்களை அடையக்கூடாதா?


ஓர் தந்தை தினமும் தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். வகுப்பறைக்குள் சென்று புத்தகப்பைகளை வைத்துவிட்டு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வகுப்பறையை நோட்டமிடுவார் தந்தை. ஒரு நாள் வகுப்பறை சுவர்களில் நான்கு அட்டைகள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பல மாணவ மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்டு அதற்கு நேராக ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய கட்டத்தில் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தன. சில மாணவ மாணவிகள் அதிக புள்ளிகளையும் பெற்றிருந்தனர். தந்தை தன் மகன் பெயரை நான்கு அட்டைகளிலும் தேடினார். எதிலும் அவர் மகன் பெயர் இல்லை. இவ்வட்டைகள் மாணவர்களின் எதோவொரு செயலை குறிப்பதாக இருக்கலாம். சிறப்பாக செய்துள்ளவர்களுக்கு புள்ளிகள் அளித்து பாராட்டுகிறார்கள் போல், நம் மகன் அதில் இடம் பெறவில்லை ஆயினும் மகனிடம் இதுபற்றி கேட்க வேண்டாம். அவன் மனம் கஷ்டப்படும் என தனக்குத்தானே பேசிக்கொண்டு தந்தை சென்று விட்டார். அதன் பின் ஒவ்வொரு நாளும் அவ்வறிவிப்பு அட்டைகளை பார்ப்பது அவருக்கு வழக்கம். அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் திடீரென அவர் மகன் பெயர் ஓர் அட்டையில் கடைசியாக எழுதப்பட்டு இருந்தது. பெயருக்கு நேராக ஓர் புள்ளியும் வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து மகிழ்ந்து போன தந்தை தன் மகனிடம் இந்த அட்டைகளில் பெயர்கள் எழுதி வைத்திருக்கிறார்களே! எதற்காக? என தன் மகனை கேட்டார். மகன் ஆசிரியர் சொன்ன வேலைகளை சரியாக செய்யாத மாணவ, மாணவியரின் பெயர்கள் அவ்வட்டைகளில் எழுதப்படும். ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை தவறுகள் செய்கிறார்களோ அதற்கேற்றவாறு புள்ளிகளும் வைக்கப்படும். அவைகள் “கரும்புள்ளிகள்” நான் கரும்புள்ளிகள் வாங்காமல் இருந்தேன். சென்ற மாதம் ஓர் தவறு செய்ததால் என் பெயரும் எழுதப்பட்டு கரும்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என சோகமாக கூறி முடித்தான். தந்தை எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நின்று விட்டார்.


இப்படித்தான் பெற்றோர்களின் பல எதிர்பார்ப்புகள் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நம் மன எண்ணமே அவர்களை எதிர் மறையாக உருவாக்கலாம். எனவே குழந்தைகள் பொருட்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தவறு. சிறுவயது முதலே “நீ இதுவாக வேண்டும்” என ஏதோவொன்றை கூறி அவர்களை வளர்ப்பது தவறு. ஏனெனில் பெரியார்களாகும் போது ஏதோவொரு காரணத்தினால் நினைத்தது போல் நடக்கவில்லையெனில் அதை அவர்களால் ஏற்று வாழ இயலாது.


இவ்விஷயத்தில் பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?


பரந்த உலகத்தில் இருப்பவற்றை எல்லாம் திறந்த உள்ளத்துடன் நம் குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டும். உலகத்தில் இத்தனையும், இன்னும் பலவும் உண்டு. தேவையானவற்றை தேடிப் பெறு அதற்கு தேவைப்பட்ட உதவியை நாங்கள் செய்கிறோம். என உங்கள் குழந்தைக்கு கூற வேண்டும். அதுவே பெற்றோர் கடமையும். அப்போதுதான் பெற்றோரை விட பல மடங்கு உயர்ந்தவராக குழந்தைகள் உருவெடுப்பார்கள். அதற்கு மாறாக நம் அனுபவமும், அறிவும் என்ற வட்டத்திற்குள் குழந்தைகளை அடைக்கக்கூடாது.

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...